Sunday, November 23, 2008

என் காதலி











வைகறைப் பொழுதில்
வானவில் வளைவில்
உன் வதன
நெற்றியின்
நெளிவு நிதம்
கண்டு
உளம் கனிந்து
உவகையுற்றேன்!

வில் நிறம்
தனில்
கண்ணின் கரு
வட்ட வடிவு
கண்டு
என்னை ஈர்க்கும்
இயைவை
எண்ணி ஏங்கி
நின்றேன்!

சாளரவோரம் நின்று
விண்நோக்கி
வெண் மேக
மெல்லிய
நல்லாடையணிந்த
தண்மதியின்
மெல்லிடை கண்டு
உன்னிடையின்
செந்நிறம்தனை
நினைந்து
உறைந்து
உருகினேன்
என் தோழி....

No comments: