Sunday, November 23, 2008

தகர்த்திடு

கருவிலும் சொல்லவில்லை
உருவிலும் மாற்றமில்லை
அறிவிலும் குறையில்லை
தலையிலும் எழுதவில்லை
பிறப்பால் மனிதர்தான் ....எங்கு?
(நிறப்)பால் கண்டாய்
மனிதா?

மனிதன் மேம்பட
வகுத்தான் பிரிவை
முன்னோன்....
பின்னோன் பிரித்திழித்து
பிதற்றுகிறான்- நான்
மேலோன்- நீ
கிழோன் என......

வெட்டினால்
கொட்டும் இரத்தம்
மட்டும் சிவப்பு...பின்னேன்?
மனிதரில் உமக்கு
வகுப்பு!

அறிவில் ஆறு
வடிவில் மிக்கழகு
குணத்தில் கனிவு
பண்பில் அன்பு
நடையில் பீடு- அவன்
கொடையில் வள்ளல்- யாவரும்
பாடையில் ஈறாக
பேடை உனக்கேன்
ஜாடை!

பிறர்
துன்பியல் கண்டால்
துடித்திடும் மனது
வம்பியல் தெரியாது
நம்பி வந்தோர்
நலன் காக்கும்
நற்றியில் தெரியும்
சுற்ற இருப்போரை
பெற்றவர் போல்
பேணிக் காத்திடும்
இவ்வியல் கண்டால்
ஏற்றிப்போற்றிடு
இவனே மேலோன்
எழுந்திடும் மனிதம்
இகத்தே எந்நாளும்!

No comments: