Wednesday, November 26, 2008

மழலை


பச்சிளம் குழந்தையின்
பல்லே இல்லாத
பவளவாய்ச் சிரிப்பு
பகட்டாய் இருக்கும்
பண்ணிசையும்
ஒருபடி குறைவுதான்
அதற்கு...

பார்ப்போர் மனதில்
பால் வார்க்கும்
விண் மீன்களும்
மெல்லென சிரித்து
நல்லொழி காட்டும்...

வெண்ணிலா
தன்னொழி மறந்த
இவ்வொளிதனில்
இனிதே
இரசனை கொள்ளும்...

கூவிடும் குயில்கள் - தன்
குரலை அமுக்கி
ஒரு கணம்
சிரிக்கும் குழந்தையின்
சிங்காரவொலியை
ஒளிந்து கேட்கம்...

பால் பொங்கும்
பசும் பொன்
முகம் கண்டு
பசியால் துடித்திடும்
மானிடர்
தன்னிலை மறந்து
இந்நிலைதனில்
இசைந்து கொள்வர்...

கிள்ளையென சிறு
பிள்ளை
துள்ளி விளையாடும்
கொள்ளை அழகு
கோடி கொடுத்தும்
தேடி வராது
உமக்கு!

No comments: