Tuesday, December 16, 2008

தெவிட்டாத தேன்

உன் மீது
எனக்குள் எழுந்த
காதலால்
உன் ஒவ்வொரு
அசைவிற்கும்
அர்த்தம் சொல்ல
முற்பட்டு
கலைச்சொற்கள்
தேடித்தேடி
தமிழுள் மூழ்கினேன்
முடிவில்
உன்னை விட
பேரழகி என்
இனிய தமிழேயென
தமிழவளை
காதலிக்கின்றேன்
என் உயிர்
பிரிந்து உடல்
சிதைந்தாலும்
இவள் மீது
கொண்ட காதல்
தெவிட்டாத
தேனாக என்றும்
இருக்கும்...

Monday, December 15, 2008

தூது செல்வாயா?

உனைக் கண்ட
முதல் நாள்
முகம்பார்த்தேன்
நீ எனைப்பார்த்தாய்

மறுநாள் கண்
சிமிட்டினேன்
நீயும் சிமிட்டினாய்

இன்னொரு நாள்
என் புன்முறுவலுக்கு
பதிலுக்கு நீயும்
முறுவல் தந்தாய்

ஹாய் சொல்ல
ஹாய்
நலமா?
என்றாய்
நலமே என்று
நகர்ந்தேன்
இவ்வாறு
நாட்கள் சில
நகர...

நானும் மடையன்
நீ காதலிப்பதாக
எண்ணி
ஒரு நாள்
உன்னிடம்
காதல் சொல்ல
மெல்ல உன்னருகே
வந்தேன்
நீயும் என்னருகே
வந்தாய்...

வாய்திறக்க முன்பு
தூது செல்வாயா
உன் நண்பனிடம்
எனக்காக...
காதலிப்பதாக
சொல் என்றாய்...
ஆமென்று தலையசைத்தேன்
என்னாசை
சொல்லாமலே
சென்றது
என்னிடம்...

துரதிஸ்டம்

பூக்களின் ஸ்பரிசம்
தொட்டதால்
தென்றலில்
நறுமணம்
கமழ்ந்தது

நீ என்
ஸ்பரிசம்
தொட்டதால்
இப்பிறப்பின் பேறு
பெற்றேன்
என்றுணர்ந்தேன்

சற்று விலகி
நீயும்
"குட் பாய்"
சொன்னாய்
இப்பிறப்பே
துரதிஸ்டம்
என்று உணர்கிறேன்...

Sunday, December 14, 2008

இன்னும் காதலிப்பதால்

காதலி என்றாய்
காதலித்தேன்
வா என்றாய்
வந்தேன்
போ என்றாய்
போனேன்
நில் என்றாய்
நின்றேன்
நிறுத்து என்றாய்
நிறுத்தினேன்
பாடு என்றாய்
பாடினேன்
ஆடுடா என்றாய்
ஆடினேன்
இவ்வாறு
நீ இட்ட
கட்டளையை
சிரம் தாழ்த்தி
நிறைவேற்றினேன்
எல்லாம் உன்னை
நேசிப்பதால்
கடைசியில் ஒன்று
சொன்னாய்
இனிமேல்
என்னை மறந்திடு
என்று
அதையும் செய்து
நிற்கிறேன்

ஏனெனில் இன்னும்
உன்னை காதலிப்பதால்

ஏற்க மறுத்ததால்



கண்கள் தூங்க
மறுத்தன
வாய் உண்ண
மறுத்தது
உதடுகள் அசை
மறுத்தன
கால்கள் நடக்க
மறுத்தன......
உள்ளமும்
உடலும்
உணர்வற்ற
நிலையில்
உயிர் ஊசலாடுகின்றது

இவ்வளவும் நீ
என் காதலை
ஏற்க மறுத்ததால்
வந்த வினை...

கைவிட்ட நாளிலிருந்து

கோடையின் வெப்பத்தால்
வரட்சியின் தாண்டவம்
ஆனால்
நான் மட்டும்
நீ என்னை
காதலித்து
கைவிட்ட நாளிலிருந்து
ஒவ்வோரு நிமிடமும்
கண்ணீரின்
தண்ணீரில்
மிதக்கின்றேன்
உடல் குளிர்கிறது
உள்ளமோ வெப்பத்தில்
வெதும்புகிறது!