Sunday, December 14, 2008

இன்னும் காதலிப்பதால்

காதலி என்றாய்
காதலித்தேன்
வா என்றாய்
வந்தேன்
போ என்றாய்
போனேன்
நில் என்றாய்
நின்றேன்
நிறுத்து என்றாய்
நிறுத்தினேன்
பாடு என்றாய்
பாடினேன்
ஆடுடா என்றாய்
ஆடினேன்
இவ்வாறு
நீ இட்ட
கட்டளையை
சிரம் தாழ்த்தி
நிறைவேற்றினேன்
எல்லாம் உன்னை
நேசிப்பதால்
கடைசியில் ஒன்று
சொன்னாய்
இனிமேல்
என்னை மறந்திடு
என்று
அதையும் செய்து
நிற்கிறேன்

ஏனெனில் இன்னும்
உன்னை காதலிப்பதால்

ஏற்க மறுத்ததால்



கண்கள் தூங்க
மறுத்தன
வாய் உண்ண
மறுத்தது
உதடுகள் அசை
மறுத்தன
கால்கள் நடக்க
மறுத்தன......
உள்ளமும்
உடலும்
உணர்வற்ற
நிலையில்
உயிர் ஊசலாடுகின்றது

இவ்வளவும் நீ
என் காதலை
ஏற்க மறுத்ததால்
வந்த வினை...

கைவிட்ட நாளிலிருந்து

கோடையின் வெப்பத்தால்
வரட்சியின் தாண்டவம்
ஆனால்
நான் மட்டும்
நீ என்னை
காதலித்து
கைவிட்ட நாளிலிருந்து
ஒவ்வோரு நிமிடமும்
கண்ணீரின்
தண்ணீரில்
மிதக்கின்றேன்
உடல் குளிர்கிறது
உள்ளமோ வெப்பத்தில்
வெதும்புகிறது!