Monday, December 15, 2008

தூது செல்வாயா?

உனைக் கண்ட
முதல் நாள்
முகம்பார்த்தேன்
நீ எனைப்பார்த்தாய்

மறுநாள் கண்
சிமிட்டினேன்
நீயும் சிமிட்டினாய்

இன்னொரு நாள்
என் புன்முறுவலுக்கு
பதிலுக்கு நீயும்
முறுவல் தந்தாய்

ஹாய் சொல்ல
ஹாய்
நலமா?
என்றாய்
நலமே என்று
நகர்ந்தேன்
இவ்வாறு
நாட்கள் சில
நகர...

நானும் மடையன்
நீ காதலிப்பதாக
எண்ணி
ஒரு நாள்
உன்னிடம்
காதல் சொல்ல
மெல்ல உன்னருகே
வந்தேன்
நீயும் என்னருகே
வந்தாய்...

வாய்திறக்க முன்பு
தூது செல்வாயா
உன் நண்பனிடம்
எனக்காக...
காதலிப்பதாக
சொல் என்றாய்...
ஆமென்று தலையசைத்தேன்
என்னாசை
சொல்லாமலே
சென்றது
என்னிடம்...

துரதிஸ்டம்

பூக்களின் ஸ்பரிசம்
தொட்டதால்
தென்றலில்
நறுமணம்
கமழ்ந்தது

நீ என்
ஸ்பரிசம்
தொட்டதால்
இப்பிறப்பின் பேறு
பெற்றேன்
என்றுணர்ந்தேன்

சற்று விலகி
நீயும்
"குட் பாய்"
சொன்னாய்
இப்பிறப்பே
துரதிஸ்டம்
என்று உணர்கிறேன்...