Tuesday, December 16, 2008

தெவிட்டாத தேன்

உன் மீது
எனக்குள் எழுந்த
காதலால்
உன் ஒவ்வொரு
அசைவிற்கும்
அர்த்தம் சொல்ல
முற்பட்டு
கலைச்சொற்கள்
தேடித்தேடி
தமிழுள் மூழ்கினேன்
முடிவில்
உன்னை விட
பேரழகி என்
இனிய தமிழேயென
தமிழவளை
காதலிக்கின்றேன்
என் உயிர்
பிரிந்து உடல்
சிதைந்தாலும்
இவள் மீது
கொண்ட காதல்
தெவிட்டாத
தேனாக என்றும்
இருக்கும்...