Wednesday, December 30, 2009

ஒளிர்வாய் புகழாய்




Free Graphics - MySpace/Xanga/Friendster








தொல்லைகள் அகல
நல்லவை நீள
வல்லவை செய்க
உள்ளவை உணர்
உண்மையில் நில்
மெல்லென அமைதியுறு
வையென வை உன்னில்
நம்பிக்கை வை
செய்யென செய்
செயற்கரிய செயல் செய்
புல்லென இருக்காதே
வில்லென வளை
வில்லனை ஒளி
வெல்லென வெல்
பகையது வெல்
வரும் தடை அகற்று
வரும் ஆண்டை
செயலால் செப்பனிடு
ஒளிர்வாய் புகழாய்
ஒளிர்வாய்.

Sunday, December 6, 2009

விழியழகு....


நீள் வளையம்
அங்கங்கே வளைவு சுழிவு
அமைந்து அழகு கொடுக்கும்
அந்தக் கண்களுக்கு மட்டும்
அந்த பிரம்மன்
அச்சு வடிக்க
எத்தனை கலவை சேர்த்தான்
என்று எண்ணிப்பார்க்கவே
திகிலடைகிறது என்கண்கள் ...
நேர்த்தியுடன்
பூர்த்தியாய் பார்க்க
புண்ணியம் செய்திருக்கணும் கண்கள்...

ஒருதரம் அவை
சுற்றுகையில்
மயிலிரெண்டு தோகை
விரித்தாடுவதுபோல்
விழிகள் விரிய
அவற்றின் தோற்றம்
அழகுற தோன்றும் ...

காந்தத்திலும் ஒவ்வா ஏற்றமுண்டு
இந்த காந்த கண்களில்
இரு ஏற்றங்களும்
ஈர்க்கும் ஏற்றங்களாக,
பார்த்தவுடன் பற்றிக்கொள்ளும்
பார்வைகள் வர.
என்ன வித்தைகள் செய்து
இவை வார்க்கப்பட்டன
என்று எண்ணத்தோன்றுகிறது...

இவ்விழியழகை
பார்த்திட மட்டுமே
விடியும் பல
பகல்கள் வேண்டும்
அந்தகண்களோடு
இனிய கனவுகள்
எளிதாய் வந்திட
அமைதியான
இரவுகள் வேண்டும்...


வாழ்க்கை ஒரு
வட்டம் என்றும்
வாழ்ந்து முடித்த
சுகமதையும்
கண்ணின் கருவட்டவடிவம்
உணர்த்தியழகை
வார்த்தையில் வடிக்க
கிடைக்காது நேரம் ...

எண்ணிலடங்கா கண்கள்
கண்டேன்
அவை எண்ணிக்கையில்
விண்ணை முட்டும்
பெண்ணினிவள் கண்களுக்கு
ஈடாக இன்னும்
இரு விழிகள் கண்டிலேன்....

முற்றும்!

பிற்குறிப்பு:- கொஞ்சம் over தான்
என்ன பண்ற adjust பண்ணுங்க friends.
எனக்கு தேவை கவிதை உமக்கு தேவை ரசனை.

By.
K.Eலட்சியன்.

Wednesday, October 28, 2009

கன்னியும் காதலும்


இரவின் மொளனத்தில்
இனிய அமைதியை
களித்த இன்பத்தில்
உறக்க காலத்தினை
முடித்து ...
நிகரில்லா மகிழ்ச்சியில்
துள்ளிக்குதிக்கும்
மனவுள்ளத்தோடு
காலைக்கதிரவனின் கதிர்களை
கண்டு மொனத்தை
கலைத்து இரா மெல்ல செல்ல ...
மழைத்துளிகளை
தரையில் கொட்ட
துடிக்கும் கருமேகம் போல
பொறுத்து பொறுத்து
காத்திருந்து தாங்காமல்
மொட்டு சட்டென வெடித்து
மலராய் மலர
அதுவரை நேற்றின்
இனிய போதையில்
படுத்துறங்கிய சிறுவண்டுகள்
மொட்டு வெடிப்பின்
ஓசைகேட்க
இடியோசை கேட்ட
நாகமென திடிரென்று விழித்து
தேனை அருந்த
ஓடோடி வரும்
தேனீக்கள் போல ....
அன்பையும் அழகோடு கூடிய
அரவணைப்பையும் நாடிச் சென்றிட
துடிக்கிறது கன்னியின் உள்ளம்
அதைத்தான் காதல் என்கிறது
காலம் காலமாய் எழும்
காவியங்களும் ..............


By.K.Eலட்சியன்

Wednesday, August 19, 2009

சந்தேகம்

உலகிலாயிரம் கோடி
வாயில்வரா
நோய்கள் பல
இருந்தும் இதுவொன்றும்
புது நோயல்ல
எவரிடமும் எளிதில்
ஊடுருவி தாக்கவல்ல
தொற்றுக்கிருமி
சத்தம் இல்லாமல்
உள்ளே இருந்து
உயிரை உறிஞ்சும்
உயிர் கொல்லி

வறுமையிலும்
வாழலாம்
சிறுமையுள்ளும்
சீர்தூக்கலாம்
ஏன் எனில்
நிம்மதி அங்கிருக்கு
நிம்மதி கெடுத்து
அமைதி குலைத்து
அழிய வைக்கும்
சந்தேகம் வராவிட்டால்.

கணவன் மனைவி
மீது பாய
மனைவி கணவன்
மீது பாய
தூண்டி தூண்டி
மனக்கிளர்ச்சிகளை
உண்டுபண்ணி
ஈற்றில்
நீதிமன்ற வாசல்படி
ஏறவைத்து
இருவரையும்
எல்லோரும் இவர்களை
எள்ளி நகையாடி
வாயில் வருவது
பேச வைக்கிறது.

சந்தேகம் யாரையும்
விட்டு வைப்பதில்லை
தெய்வத்தை கூட
ராம பிரான்
உலகம் தப்பாய்
கதைக்கும் என
சீதா பிராட்டியில்
சந்தேகப்பட்டார்
பிராட்டியையும் இழந்தார்!

சந்தோசம் காண
சந்தேகம் விலக்கி
சந்ததி போற்ற
வாழ்வு மானிடமே"


By
K.ஜயதீசன்(இலட்சியன்)

Tuesday, August 18, 2009

பணத்தின் வெம்மையில் கருகிய காதல்

காதல் யாரைத்தான்
விட்டு வைத்தது
ஒவ்வொரு மனங்களிலும்
காதல் காற்று
லேசாய் தொட்டு
செல்ல மறுப்பதில்லை
அதனை பற்றிக்கொள்ளும்
மனங்களும் உண்டு
போனால் போகட்டும் போ என்று
விட்டுச் செல்லும் உள்ளங்களும் உண்டு!


கீதன், நிதா
என்கிற இரு உள்ளங்களை
தன்விரிந்த போர்வையால்
போர்த்திக்கொண்டு
விலக விடாமல்
மூடிக்கொள்கிறது காதல்
எல்லையில்லா காதல் வானிடை
இறக்கையின்றி பறக்கும்
அதிசயப் பறவைகளானார்கள்

நகமும் சதையும் போல
ஒருவரை ஒருவர்
இணைபிரியாது
இவர்கள் காதலில் மூழ்கினார்கள்
அதனால்
இடைவிடாது
தொடர்கிறது
காதல் யாத்திரை
கரடு முரடுகள்
மேடுபள்ளம்
வீதியிலும் வீதியோரத்திலும்
நதியிலும் நதியோரத்திலும்
எங்கும் செல்வோம்
எதிலும் நம்காதல் சொல்வோம்
என்று தொடர்ந்து
பயணிக்கிறது இவர்கள் காதல்பயணம்.


பரந்து விரிந்த
காதல் கடலிடை
நீச்சலடிக்கும்
ஜோடி மீன்களாய்
கீதனும், நிதாவும்

ஆனால்
இவர்கள்
குடும்பப்பின்னணி
வேறு விதமாக
அமைகிறது
அங்குதான் ஏற்றத்தாழ்வுகள்
புரையோடுகின்றன...
வெவ்வேறு
கோடுகளில்
அவர்கள் குடும்ப
சக்கரங்கள் சுழன்று
செல்கின்றன
பணத்தின் மேல்
படுக்கும் அளவிற்கு
கீதன் வாழ்கின்றான்
அன்றாடம் காச்சியாய்
இருக்கின்றாள்
நிதா

கீதன் நிதா
காதல் கதை
அவரவர்
குடும்ப முகவரியை
எட்ட
துள்ளிக்குதிக்கின்றார்
கனவான்
கீதனின் தகப்பன்


ஒரு வேளைக்
கஞ்சிக்கே வழியில்லா
பிச்சைக்கார......
என்று
இஞ்ஞனம்
பணத்திமிர்
வார்த்தைகளை
அள்ளி வீசுகிறது

நீ அவளை
இனி பார்க்க
போனாய் என்றால்
உனக்கு இங்கு
இனி இடமில்லை என்றும்

அதுமட்டுமன்றி
எங்களை உயிருடன்
பார்க்க முடியாது என்றும்
கடினமான பூட்டால்
அவனது காதல் கதவை
பூட்டி விட
செய்வதறியாது தவிர்க்கின்றான்.

பெற்றோர் மீது
கொண்ட பற்று எனும்
நெருப்பால் இவன் காதல்
எரிந்தது.
சீக்கிரமே
பணத்தால் உயர்ந்த
பெண்ணுக்கு இவன்
மாலையிடவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

ஏழையின் வயிற்றில்
உதித்தது தப்பா ?
பணக்காரனை காதலித்தது தப்பா?
நிதா வேதனையில்
நொந்து வெந்து
நூலாகிறாள்
நீரில்லா குளத்தில்
நீச்சலடிக்க முனைந்த மீனாய்
இவள் கதை இவ்வாறு...

பணத்தின் வெம்மையில்
கருகிய காதலாய்
இவர்கள் காதல்
மாறியது!

Monday, August 17, 2009

Love

கனவில் காதலிக்கு உம்மா

ஏன்
இவ்வளவு
தாமதம் ...
என்று கண்ணன் சொல்ல


இன்று
பஸ் கொஞ்சம்
லேட்டாகிவிட்டது
ராதா பதிலளித்தாள்


அன்புக்கோபம்
காட்டினான்
கண்ணனவன்

அவளும் பதிலுக்கு
கோபிக்காதடா
கண்ணா
என் செல்லம் எலா நீ

ஐஸ் வைக்காத
என்னை
காக்க வைத்து விட்டு
என்றான் இவன்.

அப்படி இப்படி
என்று
கோபம் இருவருக்கு
அன்பாய் மாற
அவள் முதலில்
மெல்ல முத்தம் இட்டாள் கன்னத்தில்

ஐயா விடுவாரா
பதிலுக்கு
ஊ ஊ ஊ
உதட்டை நீட்டி
உம்மா கொடுக்க போனார்
அந்த சமயம்
அம்மா இவருக்கு ரீ கொண்டுவர
அண்ணார்ந்து படுத்திருந்து
கனவில் காதலிக்கு
உம்மா கொடுக்கும் இவரைப்பார்த்து
அம்மாவுக்கு கடுப்பு வர
சுடு ரீ யை உதட்டில் தெளித்துவிட
தம்பி கண்ணனுக்கு கனவு தெளிந்து
ஆய் என்று கத்தினார்....

By.
K.Eலட்சியன்

Sunday, August 16, 2009

"சின்னதாய் ஒரு புன்னகை செய்"


கனலென கோபம் -உன்
ஞாபகம் மறைத்து
மதியை வென்று
கதியை மாற்றும்
வழியது காணாதே!
கோபமடக்கி
சிறிதாய்
புன்னகைத்திடு....

பிறர் சொல்வது
சிலவேளையதில்
தப்பாய்ப்பட்டால்
சினம் உன்னை
ஆட்கொணரும்
வகையது தோணில்
சின்னதாய் ஒரு புன்னகைத்திடு....

பெரியோர்
சொன்னதாய்
சிறிதோர் ஞாபகம்
கோபம் பின்னது
பாவமாய் அமையும் என்று,
வாழ்விலும் கண்டேன்!
கோபம் கண்டேல்
மெல்லதாய் ஒரு
புன்னகை செய்!

மூத்தோர் சொல்லது
பழுத்த ஞானச்சொல்
எமக்கது புதிதாய்
எரிச்சலை உண்டு பண்ணலாம்,
மெதுவாய் சினம் அடக்கி
சிறிதாய் புன்னகைத்திடு...

சினம் சினம்
வெஞ்சினம்
கொண்டு
தனக்கு தானே
நஞ்சினையூட்டியவர்
எத்தனை எத்தனையென
வரலாறு சொல்லும்
வகையது பார்த்து
அடக்கி சினத்தை
அழகாய் புன்னகைத்திடு....

கொபம் கொள்வது
தப்பன்று அது
தன்னை ஆழ விடுவது
ஆபத்தை தரும்
எனும் நெறியறிந்து
ஒழுகிடு....
முகமலர்ந்து
எவரையும் அடக்கிட
உனக்கு ஓர்
வசீக மொழியுண்டு
அதுதான் புன்னகை!


By.
K.Eலட்சியன்

Thursday, August 13, 2009

காதல் சுகமானதா?

காதல் சுகமானதா?

தூக்கத்தில் நடக்கிறேன்
தனிமையில் ஏதேதோ பேசுகிறேன்,
கண்கள் மூடினாலும்
தூக்கம்வர மறுக்கிறது,
ஒவ்வொரு நொடியும்
ஒவ்வொருயுகமாக தோன்றுகிறது,
அன்பாய் பேசும்
அம்மாவிடம் எரிந்து விழுகிறேன்,
அம்மா அப்பா
பெரிதாய் தெரியவில்லை,
புத்தகம் திறந்தால்
புத்தகத்துடன் கதைக்கிறேன்
பக்கத்தில் நண்பன்
பைத்தியமாடா? என்று கேட்கிறான்,
படிப்பில் நாட்டமில்லை,
எல்லா முகத்திலும் அவளே தெரிவதால்
காணும் ஒவ்வொரு பெண்ணையும்
பார்த்து பல்லிளிக்கிறேன்,
இவ்வளவும் வழமைக்கு மாறாக
நடக்கின்றன
அப்படியென்றால் காதல் சுகமானதா?
இல்லை இல்லை காதல் பெரும் அவஸ்தை...


அன்புடன்
க.Eலட்சியன்

Monday, August 10, 2009

பனிச் சாரல் கொண்டு - உன்முகம் துடைப்பேன்....

பனிச் சாரல் கொண்டு - உன்
முகம் துடைப்பேன்
மழைத்தூறலில் மஞ்சள் கரைத்து
உனை நீராட்டுவேன்!

பூக்களின் மகரந்தம் அரைத்து
உன்னில் பூசி
நறுமணமாக்குவேன்!

வெண்பாக்கள் தொடுத்து
உன்பால் கவிபுனைவேன்
செந்தமிழ் சிலவெடுத்து - உன்
செந்நிற அழகை
செதுக்கிடுவேன் வரிகளில்!

கம்பளமாக விரியும்
பச்சைப்புல்வெளியில்
உனக்கெனவும் எனக்கெனவும்
மலர்களாலான பாயொன்று விரித்திட்டு
அங்கே உட்கார்ந்து இருவரும்
அண்ணார்ந்து ஆகாய நிலவை
சாட்சியாய் வைத்து
காதல் சல்லாபம் புரிவோம்
விண்மீன்கள் வெட்கத்தில
ஒருகண் மறைத்து
ஓரக்கண்ணால் எமைப்பார்த்து
பவ்விய சிரிப்பு சிரிக்கட்டும்!

ஓவியர் பலரை அழைத்து
உன்னழகை நான்சொல்
வரைந்திட நிறச்சேர்க்கைக்கு
வானவில்லை வரவழைப்பேன்....

கவிவல்லோரை அழைத்து
காவியம் படைத்திட
மானியமாய் அவர்களுக்கு
தானியம்போல் தங்கம் கொடுப்பேன்!

தொடரும்.......

என்சிந்தனையில் ஏற்பட்ட தடங்களுக்கு வருந்துகிறேன் யாவும் கற்பனை.

Sunday, August 9, 2009

உடன்பிறப்புக்கள்

அன்னை
என்னை பெற முன்பே!
உம்மை எனது
வழிகாட்டிகளாய்
ஈன்றெடுத்து
பரிசளித்தாள்!

கரடு முரடான
பாதை அதை
இலகுவாக்க
முன்னே வந்தனர்
என் சோதரர்
பின்னே எனக்கென்ன
தெரியும் கஸ்டம் என்றால்!


எங்கிருந்து
இன்னல்கண்டாலும்
நல்வழிகாட்டும்
கலங்கரை
விளக்குகள்
அவர்களே!


எப்படி வாழணும்
என்பதை
அவர்கள்
வாழ்ந்து கொண்டே
காட்டுகின்ற
என் வரலாற்று
செதுக்கிகள்!


தான் பட்ட துன்பங்கள்
தன்தம்பி படக்கூடாது என
தன்னலம் அற்று
தடையகற்றியவர்கள்!


எனக்குத்துணைகளாய்
என்னைப்பொறுத்தவரை
இறைவன் தந்த
ஈடற்ற பொக்கிஷங்கள்!


வாழணும் என்றும்
சோதரரே
உம்மோடு ஒன்றுபட்டு
என்றுதான் இன்றும்
என்றும் இறைவனை
பிராத்திக்கின்றேன்!


கண்ணை இமை
காப்பது போல்
என்னை நீவீர் காக்கும்
பாதுகாப்பு
சுவர்கள் நீங்களே!

என்றுமே
குறையாது
சுரக்கின்ற
பாசத்தின்
சுரப்பிகள்!

எப்பிறப்பிறப்பிலும்
எவ்வாறு பிறப்பினும்
எனக்கு நீவீர்
உடன்பிறப்புக்களாய்
பிறந்திடுவீர்! என்
இரத்த உறவுகளே!

Monday, August 3, 2009

உன்வருகையை எதிர்பார்த்து!

பெண்ணே!
உனக்காக
இறைவனை
பிராத்திக்க முடியாதுள்ளது
ஏனெனில்
என்மனத்தை நீ
சிறைப்பிடித்துவிட்டாய்
மனம் இல்லாமல்
எப்படி இறைவனை
பிராத்திப்பேன்...

கண்ணே!
கடவுளைப் பூசிக்க
பூக்கள் இல்லை
என்னிடம்...
எல்லாப்பூக்களையும்
நீ வரும் பாதையில்
தூவி விடுவதால்...

என்னவளே!
மூளைக்கு தகவல்
வழங்கியான மூளியின்
கட்டளையை
கால்கள் ஏற்க மறுக்கின்றன
ஏனெனில்
உன்னை நோக்கி
வருவது என்கால்களுக்கு
பழக்கமாகிவிட்டதால்...

பெண்ணே!
இரவில்
எனக்குப் பக்கத்தில்
உனக்காய் ஒரு
படுக்கையை விரிக்கிறேன்
பூக்களால்.
கனவில் நீ வருவாய்
என்ற
நம்பிக்கையில்.....


எல்லோரும்
உறங்கிய பின்
எனக்கும் நிலவுக்கு
நிழல் யுத்தம் நடக்கிறது
என்னவளிடம்
எனக்காய்
தூது செல்ல
நிலா மறுப்பதால்...


அன்போடு அம்மாவின்
அழைப்பு
ஆத்திரத்தில்
எரிந்தவிடுகிறேன்
உன்னைப்பற்றிய
சிந்தனையை
சிதறடித்ததற்காக...

என் இதயத்துள்
கோயில் ஒன்று
கும்பாபிஷேகத்திற்கு
தயாராக...
நீதான் கடவுள்
உன்வருகையை
எதிர்பார்த்து நான்....


என்றும் உயிர்ப்புடன் என்காதல்

நாதியற்று
நானிருந்த வேளையது
தேதிசொல்லி
காதல் சொன்னாய்
என்பேறு என்றெண்ணி
ஆனந்தத்தில்
மிதந்தேன்
சில நாளதில்
கைவிட்டாய்
கழுத்தறுத்தாய் நீ
இன்று
நட்டாற்றில்
நாதியற்ற
கைப்பொம்மையாய்
தண்ணீரீல்
அடித்செல்லப்படுகிறேன்...

உன்வார்த்தைகள் எங்கே
உன்பொய்மையில்
உன் காதல் செத்தது
என்றும் உயிர்ப்புடன்
என்காதல்..

Sunday, August 2, 2009

நித்தம் முத்தம் சத்தத்துடன்




யுத்தமோ


முத்தமோ


சத்தத்துடன்....


நீயும் நானும்


ஒன்றையொன்று


ஈர்க்கும்


ஏற்ற காந்தங்கள்


முத்தத்தில்தான்


ஒட்டிக்கொள்வோம்...



மழையென வந்து


துளியென தூறி


மண்ணென ஆன


பெண்ணெ


உனக்கிடும்


முத்தங்கள் ஆயிரமாயிரம்....



அலையென தாவி


கரையான உனக்கு


இட்டுடுவேன்


இச்சை முத்தங்கள்


எக்கணமும்...



ஆண்மேகம் நான்


பெண்மேகம் நீ


மோதிக்கொண்டு


முத்தமிட


எச்சைகளாக


மழைநீர்....



நித்தம்


முத்தம்


சத்தத்துடன்......



காதல் பிறந்து ஓராண்டாகிறது .......சிறுகதை........

....விடியவதற்கு 2 மணித்தியாலயங்கள் இருக்கும்போதே எழும்பி விட்டாள் கேமா, என்றும் இல்லாதவாறு மகிழ்வுடனும், புதுதெம்புடனும் காணப்பட்டாள், வேக வேகமாக காலைக்கடன்கடன்களை முடித்துவிட்டு வருவதற்கும் அவளது அப்பா அம்மா நித்திரைவிட்டு எழும்புவதற்கு கணக்காக இருந்தது, ஒரு போதும் அவள் அப்படி எழும்புவதில்லை, இன்று மட்டும் தாம் எழும்பு வதற்கு முன்பே எழுந்து , எல்லாக்காரியங்களையும் முடித்துவிட்டு தங்களுக்கு தேனீர்க்கப்புடன் வணக்கம் சொல்லி நின்ற கேமாவை பார்த்து வியப்படைந்தனர் அவளது அம்மாவும், அப்பாவும் தம்பியும், என்ன கேமா இன்று மழைகட்டாயம் வரும்போல இருக்கே என்று வியப்புக்குறி சொன்னார்கள், இதைக்கேட்ட அவளுக்கு உள்ளுக்குள் மழை பெய்த சந்தோசம்தான் ஏற்பட்டது, அவர்கள் சொன்னதற்கு அல்ல அவளது காதலுக்கு ஒரு வயதாகிறது என்ற மகிழ்ச்சியில்... கேமா மெல்ல சென்ற ஆண்டின் நண்பர்கள் தின நிகழ்வுகளுக்கு மூழ்கினாள், ஆகாஷ் கேமாவின் நண்பன் பள்ளிக்கூடத்தில் சேர்ந்ததில் இருந்து இருவரும் இணைபிரியா நண்பர்கள் படிப்பு, விளையாட்டு, பொழுதுபோக்கு, எதுவாகினும் எங்கு சென்றாலும் அவர்கள் கூடுதலாக பிரியா நண்பர்களாகவே இருந்தனர். அவர்களுக்குள் ஒருவருக்கொருவரை விட்டுக்கொடுக்கின்ற பண்பு, எந்த விடயத்தையும் மனம்விட்டு பேசிக்கொள்கின்ற மொத்தத்தில் அந்த நட்பு இணை அவர்களே...இருந்தும் அவர்களுக்குள் காதல் அவர்களை அறியாமலே முளைவிட்டது, அதுவரை நண்பர்களாக பழகி வந்தவர்களுக்கு ஆகஸ்ட்02, 2008 அன்றைய நண்பர்கள் தினம் ஒரு சபாலாகவே அமைந்து விட்டது, காலையிலே வருவதாக கூறிய ஆகாஷை எதிர்பார்த்து கடற்கரையில் மெல்ல அங்கும் இங்கு நடந்த வண்ணம் இருந்தாள் கேமா, சில நிமிடங்களில் ஆகாஷ் வந்தான் கையில் ஒரு பொக்கையுடன், வந்தவன் அந்த பொக்கையை கொடுத்து ஐ லவ் யூ கேமா என்று எந்தவித தயக்கமும் இன்றி சொன்னான், கேமா இதை எதிர்பார்க்கவே இல்லை, வியப்பில் விழிகள் அகன்றன, இருந்தும் உள்மனது மகிழ்ச்சியில் துள்ளியது, சுதாகரித்துக் கொண்டு இப்படி திடிரென்று சொன்னால் எப்படி என்று கேட்டாள் , கேமா இனியும் நாம் நண்பர்கள் தினத்தை தப்பாக பயன்படுத்தக்கூடாது, நட்பு தந்த காதல் பரிசு நீயே என்று கவிவடிவில் வார்த்தைகளை வழங்கினான் கேமா மெல்லென புன்முறுவல் செய்து காதலுக்கு பச்சைக்கொடி காட்டினாள் , நண்பர்கள் தினம் காதலுக்கு பிள்ளையார் சுழி போட்டது. ...... நினைவு மீள கேமா ஆகாஷ்யுடன் 2வது காதல் ஆண்டை கொண்டாட கடற்கரையை நோக்கி புறப்பட்டாள்.

Saturday, August 1, 2009

நட்"பூ"


பூமிகொண்ட
பூக்கள் கோடி
புனிதமிகு
பூக்கள் பல
காலைதோன்றி
"மாலை"யாய்
மடியும் காண்
சிற்சில
மாலைவந்து
காலையிலே வாடி வதங்கி விடும்॥
வருடங்கள் கழிந்தும்
வாடாதிது
அழ"கு"ன்றாக
அழிவுறாதிது
யுகங்கள் கடந்தும்
கடக்குமிது
காவியமாய்
அதுவே
நல் நட்"பூ"


Thursday, July 30, 2009

கண்ணெதிர் தோன்றி

கண்ணெதிர் தோன்றி
காட்சி கொடுத்து
பின்னரை நொடியில்
மின்னலாய் மறைகிறாய்!

வரட்சியாய் நான்
துளித்துளியாய் நீ(ர்) -என்
விழியகல
விடைபெறுகிறாய் ஏன்?

கருவுடையாள் பெண்
உருத்தருவாளவள்,
நீயும் பெண்தானே
நான் சுமக்கும்
உன்மீதான காதலின்
கருவறுப்பதேன்?

மேகமாய் நான்
வெண்ணிலா நீ
உனைக்கடந்து
செல்கின்றேன் - எனை
கைத்தலம்பற்றிக் கொள்வாயா?

ஊசலாடும் என்
மனதின்
நிறுத்த கையிறாக
நீ இருக்கிறாய்
நீட்டாதே இன்னும்
நாளை நாளை
என்று!

என் வாழ்வு
இருளாகிறது
முழுமையாய் உன்
முகம் காட்டு
என் நிலவே.

Wednesday, July 29, 2009

பெண்ணும் றோஜாவும்


"றோஜா அழகு
அருகே முள்
மெல்லென பறித்திடு
இல்லையேல்
சீண்டாப்படுவாய்!

பெண்ணது மென்னை
அங்கே உண்டு வன்மை
அணுகு பெண்மையை
மெல்லென அணுகு
இல்லையேல்
மீளாது
அங்கும் சீண்டப்படுவாய்"



Tuesday, July 28, 2009

யாசகன்


இருகரங்கள்
நீட்ட உன்னை என்னால்
எட்ட முடியவில்லை
நட்பே...

அன்றாடம் நாம்
பரிமாறிக் கொள்ளும்
பண்பான
வார்த்தைகள்
பரிவட்டம் வீச
பற்றிக்கொள்கிறேன்
உன் இனிய நட்பை...

என்
மனக்காயங்கள் போக
உன்
மனக்கரங்களை நீட்டி
தடவும் இனிய
வார்த்தைகளுக்காக
ஏங்கி நிற்கும் நான் உன்
நட்பை யாசிக்கும்
யாசகன் ....

உன் பார்வையை இறைந்து கேட்கிறேன்




ஊடுருவிய
உன் பார்வை
மழுங்கிப் போன
மனதின் ஓட்டைகளை
ஒட்டியதோடு
சிதைந்து கிடந்த என்
சிந்தனையாற்றலை
திடமாக்கி
தீர்க்க தரிசனம் கொடுத்தது
வாழ்வின் இனிதான
சுழற்சிக்கு
உன் பார்வைக்குள் பல
செயலாக்கிகள் உள்ளதடி
உன்விருப்போடு என்றும்
உன்பார்வையை
இறைந்து கேட்கிறேன்.

Monday, July 27, 2009

வர்ணிக்க வார்த்தைகள் இல்ல











வானவில் இரண்டை
நேரெதிர் என
இணைத்திட்டது போல்
இதழவள் கொண்டாள்?
எப்படி செதுக்கினான்
இச்செவ்விதழை
கற்சிலை கொண்டா
இருக்காது அதற்கு
மென்மையில்லவே இல்லை
எங்கிருந்து பெற்றான்
இதற்கான கலவையை
பிரம்மதேவன்
ஒரு வேளை
மலர்களின் கலவையோ?
அவ்விதழின்
வளைவுசுழிவை
எங்கு கற்றான்
நான்முகன்
சில வேளை
நதிகளிலிருந்தோ?
இருக்கலாம்!
வளர்பிறை இரண்டை
எப்படி பொருத்தினான்
ஓரிடத்தில்?
விண்மீன்களிடம்
சொட்டு சொட்டாய்
கடன்வாங்கி
கடைந்தெடுத்தபோது
வந்ததோ இவளது
உதட்டின் நிறம்!
வர்ணிக்க வார்த்தைகள் இல்லை
கொவ்வை அவள்
செவ்வையிதழ் சொல்ல....

குளிர வைக்கும் "தண்" ணீராய்

சருகாய்க் கூட
இலையின்றி
காய்ந்த மரமாய்
நின்றவேளை
என்னில்
மழையாய் பொழிந்தாய்

தரிசு நிலமாய்
நான் நாட்களை
கடத்திய வேளை
றோஜா செடியாய்
என்னில் மலர்ந்தாய்

சின்னச்சின்னதாய் உள்ள
விண்மீன்கள் நடுவே
வந்துதித்த நிலாத்தேவையடி நீ

உறக்கம் இழந்து
உறங்க மனமின்றி இருந்தேன்
உன் வருகைக்காக
உறங்குகிறேன்
கனவில் நீ வருவாய் என।

வரண்ட பூமியதில்
தாகத்தின்
கொடுமையில்
கானல் நீரை நம்பி
ஏமாந்து ஏமாந்து
இருந்த வேளை
என்னருகே மெல்லென
பாய்ந்து செல்கின்ற
நதியாய் வந்தாய்!

இப்போ நீ எங்கோ
நானெங்கோ
இருந்தும்
கொடுந்தளீர் நெருப்பின்
அணைத்து
நடுவேயென்னை
குளீர வைக்கும்
தண்ணீராய் நிந்தன்
நினைவுகள் நிழலாய் தொடர்கின்றன,,,.

Sunday, July 26, 2009

பாரடி பாரடி என் முகம் பாரடி

பாரடி பாரடி
என் முகம் பாரடி
ஞாபகம் ஏனடி
ஏனடி இல்லையோ இல்லையோ
தேன் சிந்தும் உன் முகம்
ஓர்முறை காட்டடி காட்டடி!

பாரடி பாரடி என்
தேகம் பாரடி
போகிறேன் போகிறேன்
இறுதி நாட்களை
எண்ணியே எண்ணியே
ஏனடி தாமதம்
இரக்கமே என்னுடன்
இல்லையோ இல்லையோ

பாரடி பாரடி என்
தவம் பாரடி
நீயின்றிய வாழ்வு
எனக்கு ஏதடி ஏதடி
உன் பூ முகம்
காணவே என்
இருவிழிகள் ஏங்குதே!

பாரடி பாரடி
இப்பாவியை பாரடி
ஊனுடல் உருகி
என்னுள்ளம் கலங்குதே
உன்னுடன் பழக
என்னன்பு அலையுதே
அலையுதே!

பாரடி பாரடி இப்பவே
பாரடி
இல்லையே இல்லையே
என்னுடல் விட்டு
உயிரது போகுமே போகுமே!
பாரடி பாரடி!

Saturday, July 25, 2009

இன்றும் என்வார்த்தைகள் பொய்யாது

எனக்காக வாழ்வேன்
என்றுரைத்தாய்
உனக்காக வாழ்வேன்!
பதிலுக்கு நானும்
சொன்னேன்...

இடையில் சில
நாட்கள் நகர
இன்னொருத்தனுடன்
நீ வாழ்கிறாய்...
எனக்காகவா
இன்னொருத்தனுடன்
வாழ்கிறாய்??
உன் வார்த்தைகள்
பொய்யானது.

என்வார்த்தைகள்
இன்றும் உண்மையாய்..
உனக்காக வாழ்வேன்
என்றுதான் சொன்னேன்
உனக்காக மட்டுமல்ல...
அவ்வாறெனின்
சோகத்தால் வாடி
முகமெல்லாம் தாடி...
ஈற்றில் என்னை
பெட்டியை மூடி
புதைத்திருப்பர்
பலர் கூடி...

நான் புத்துணர்வுடன்
இன்னும் எனக்காய்
என் பெற்றோருக்காய்
உறவினருக்காய்
வாழ்கிறேன்
வாழ்வேன்...
ஆனால்
இன்றும் என்
வார்த்தைகள்
பொய்யாது
போகின்றன...

Friday, July 24, 2009

ஒவ்வொன்றினும் உன் நினைவுகள் தொடர

என் முகம்
பார்க்க சென்று
கண்ணாடி அங்கே
முன்னாடி நின்றேன்...

எப்பவோ பார்த்த
உன் உருவம்
என் விழியின்
கருவளையத்தில்
சாய்வாய் காட்சி
தருகிறதடி...
இமைக்கவும்
பயப்படுகிறேன்
உன்மீது என்
என்இமைகள் பட்டு
விடக்கூடாதென்பதற்காக...

பூங்காவனம்
அங்கு மெல்லென
தென்றலின் தாலாட்டில்
ஆடிடும் பூக்கள்
ஒவ்வொன்றின் நடுவே
ஒளியாய் காட்சி
தர...
பூப்பறிக்க
என் கரங்கள் மறுக்குதடி...

ஒவ்வொன்றினும்
உன் நினைவுகள்
தொடர...
செயலற்றுப்போகிறேன்..

எனினும் உன்னை எனக்கு பிரியமாய் பிடித்திருக்கிறது "பிரிவே"

பிரிவே நீ
ஒரு சிறைச்சாலை

உள்ளத்தால்
ஒன்றுபட்ட
இதயங்களை
இணைய விடாமல்
நாட்கணக்கில்
தனித்தனியே
சிறையில்
பூட்டி வைத்து
ஈற்றில்
ஈவிரக்கமின்றி
கொன்று தீர்க்க
வழிசெய்யும்
நரகச்சாலை...

எனினும் உன்னை
எனக்கு பிரியமாய்
பிடித்திருக்கிறது
"பிரிவே"
பரஸ்பர
அன்பின்
ஆழத்தை
அறிவித்து
அதை இன்னும்
கூர்மையடையச் செய்யும்
சக்தி உனக்கு
மட்டும்தான் உண்டு

அதனால் உன்னை
எனக்கும் பிடிக்கிறது.....

விட்டுச்சென்ற காதலும், நிழலாய் தொடரும் நினைவுகளும்.

உருக்கும் வெயிலும்
ஒரு இதமான
குளீர் காலத்தின்
சுகந்தத்தை
அளிக்கிறது...

உடலை
உறைய வைக்கும்
பனியின் தாக்கமும்
வெதுவெதுப்பான
வெம்மை தந்து
சுகமாய் இருக்கிறது...

எல்லாம் நீ
பிரிந்து சென்றபோது
கூறிய வார்த்தைகளும்
விட்டுச்சென்ற காதலும்
நிழலாய் தொடரும்
சுகமான நினைவுகள்
தருகின்ற...
காலநிலை

தற்ப வெப்ப மாற்றங்கள்தான்...

Monday, July 20, 2009

அழகு

வண்ணக்கலையழகு
வானவில்லின் நிறமழகு
வடித்த சிலையழகு
வான் அங்கே நிலாவழகு
வாய்விரிக்க பல்லழகு
வாரணமாயிரம் அழகு
வந்தால் முன்னழகு
வழிவிட்டால் பின்னழகு
வாய்த்த இதழழகு
வா வா நீ
வந்தபின்னும் நீ அழகு
வரப்போகும் மாமியார் வடிவழகு
வாய்த்த என் நண்பர் எல்லாம் நல்லழகு!

ராஜ மகன் நீ அன்றோ













ஊரார் மலடி என
கூடியிருந்து
குற்றம் சொல்லாமல்
ஓடி வந்து என்வயிற்றுதித்த
ராஜ மகவே
வாடா உனக்கொரு
ஆசை முத்தம்
தாறேன்...



தேசம் எல்லாம்
சுற்றி வேண்டாத
சாமியில்ல
நாள் இழுத்து நாவிழுத்து
வேண்டிய வேண்டலுக்கு
வேந்தன் என வந்த
வெற்றித்திலகமடா நீ
எனக்கு...



ஊர்முழுக்க உறவிருந்தும்
ஒட்டி உறவாட
பாசம் இருந்தும்
நான் இருந்தேன் தனியாய்
நீ வந்தாய் என் துணையாய்
இனிய மகனே...



பத்து மாதம்
உனைச்சுமக்க
பட்ட வேதனை
பெரிதன்று உனை
பார்த்துப்பார்த்து
நான் மகிழ
பார்வந்த என்
பார் வேந்தன் நீ
அன்றோ...



எனக்கினி என
ஒன்றும் வேண்டேன்
எனக்கொரு தாய்
என்ற அந்தஸ்து
தந்த உன்னை
ஊட்டி வளர்க்க
ஒருபடி ஆயுள்
வேண்டி நிற்பேன்
என் மகனே!

Sunday, July 19, 2009

நட்பு

நீ ஒரு நிறம்..
நான் ஒரு நிறம்..
உனக்கொரு தாய்..
எனக்கொரு தாய்..
நானும் நீயும்
எங்கெங்கோ
பிறந்தோம்...
ஆனால் நட்பின்
பாதையில்
இணைந்திட்டோம்॥
இனியென்ன நட்பே
எனக்கும் உனக்கும்
உரிய பாதை
ஒரு தன்னலமற்ற பாதையாய்
தொடர்வோம் நம் பயணம்...

கொல்லும் காதல்


என் இதயத்தை
குத்தி கூறுபோடுகிறது
காதல்...
என் காதலே
என்னுயிர் தின்னும்
கொலைஞன் ஆனது
இதயம் சிதறி
துளித்துளியாய்
சொட்டும் ரத்தத்தில்
இருக்கும் ஒவ்வொரு
அணுக்களும் உன்
பெயர் சொல்லுமடி ...

இலட்சியனின் கிறுக்கல்கள்: காதல்

இலட்சியனின் கிறுக்கல்கள்: காதல்

காதல்


ஓய்வில்லை

மலை முகட்டின்
உச்சியில் இருந்து
தடைகள் தாண்டி
வளைவு சுழிவுகள் என
கட்டுப்படுத் முடியாமல்
ஒடி வரும்
ஒரு அருவியாய்
நான்
எனக்காய் காத்திருக்கும்
கடலாய் நீ...

என்னை நான்
நினைத்தாலும்
கட்டுப்படுத்த முடியாது
உன்னை அடைந்த பின்னே
என்
பயணம் ஓயும்
அதுவரை ஓய்வில்லை எனக்கு!



கருவறை

மூடப்பட்ட
கதவின்
அறைக்குள்
முழுமையாய்
எல்லாம் கிடைத்தன
என்ன சுகம்
என்ன ஆனந்தம்

உணவும்
உணர்வும்
கிடைத்தன அங்கு

பகையும் இல்லை
பகை எதிர்ப்பும் இல்லை
அன்பும்
அரவணைப்பும்தான்
அங்கு கிடைத்தன

பாசத்தடவல்களும்
பரிமாற்ற
ஆழ்ந்த அன்பும்தான்
அங்கு கண்டேன்

வேசமும் இல்லை- நல்
வேடம் தாங்கிய
விஷக்கிரிமிகளும் அங்கில்லை....

ஐயிரெண்டு திங்கள்
அங்கிருந்து
பெற்ற சுகம்
ஐயாயிரம் திங்கள்
சென்றிடுனும்
திருப்பு வரா எமக்கு...

Saturday, July 18, 2009

அன்பு

உன்னுடல் பார்த்து
வருவதல்ல
அன்பு

உன்னுள்ள அழகை
உணர்ந்து வருவதே
அன்பு

பார்க்கும்போது
மட்டும்
பரிமாறிக்கொள்வதல்ல
அன்பு

எங்கிருந்தாலும்
பார்க்க துடிக்கும்
இயல்பே
அன்பு

தூர இருந்தும்
மனசார
உனக்காய்
வேண்டிக்கொள்வதே
அன்பு....





மரணம்

நாம் இருக்கும்
போது
வரத்துணிவற்ற
கோழை
மரணம்....

போன பின்பு
வந்து
கும்மாளமிடும்
வாயாடி மட்டுமே நீ...

நெஞ்சில் துணிவிருந்தால்
நேருக்கு நேரே
வந்து பார்...


Thursday, July 16, 2009

அஞ்சோம்

உன்னோடு நானும்
என்னோடு நீயும்
சேரும் நாட்களுக்கு
காத்திருக்க
வேண்டியதில்லை॥

செந்நிற அழகை
அந்த நிலத்தில்
பெய்யப்பட்ட மழை நீர்
பெற்று கலந்து விடுவது
போல உன் உள்ளமும்
என் உள்ளமும்
இரண்டற கலந்து
விட்டென॥

இனி நம்மை
பிரிக்க முடியாது
சில வேளை
விதி பிரித்தால்
அந்த விதியையும்
வெல்ல
உலகத்தை விட்டுப்
பிரியவும் அஞ்சோம்॥

மரணத்தையும் வெல்வோம்

உன் மனதையும்
என் மனதையும்
இறுக கட்டிவிட்டான்
இறைவன் ...

பின்னிப்பிணைந்து விட்டன
என் இதயமும்
உன் இதயமும்॥

இனி அந்த
கடவுளே
நினைத்தாலும்
எமை
பிரிக்க முடியாது॥

மரணம் எமை
தன் தழுவிக்கொண்டாலும்
அந்த மரணத்தையும்
வெல்வோம்....

Wednesday, July 15, 2009

ஓரக்கண்ணால்

உன் கண்
அழகில் என்
கண்கள்

மயங்கிவிட்டதடி...


ஓரக்கண்ணால்
மட்டும் உன்னை
பார்க்கிறேன்
முழுமையாய்
உன்னை பார்த்தால்
உன்னை
தொடர்ந்து பார்க்கும்
சக்தி அற்றதாகிடும்
என்பதால்...

Tuesday, July 14, 2009

நான் பேயனாகி

நான் ஒரு
கிரகத்திலும்
நீ ஒரு
கிரகத்திலும்
இருந்தென்ன
லாபம்!


கற்பனைக்
கனவில் மட்டும்
காட்சி தர
வானத்து நிலவுக்கு
அழைக்கிறாய்
கனவு முடிந்ததும்
தூரத்தே தூக்கியெறியப்படுகிறேன்


வெவ்வேறு இட
வாழ்வு வேண்டாம்
என்னை நீ அழை அல்லது
என்னோடு நீயும்
வந்துவிடு...

கனவில் மட்டும்
நீ வருகிறாய் அது
கலைந்ததும்
நான் பேயனாகி
உன்னை தேடி
அலைகிறேன்..

வண்டாக

பூவோ! அல்லது
பூவினுள் உள்ள
பூந்தேனோ?

எதுவாக நீஇருப்பினும்
உன்னை தினம்
நாடி வரும்
வண்டாக
நான் இருப்பேன்॥

Monday, July 13, 2009

நட்பும் காதலும்

ஆபத்தில்தன்
உயிர் கொடுத்து
நண்பனை
காத்திடுவது
நட்பு...

அன்புக்குரியவரின்
அழிவு கண்டு
மனம் ஆற்றாது
தானும்அழிந்து
போவது
காதல்...

Sunday, July 12, 2009

வைரமுத்து இங்குற்ற இந்நாள்

தமிழ்த்தாய் வயிற்றுதித்து
மலர்ந்த
கவிப்பூங்கா
ஒன்று புது
அகவை
காணுகிறது...

வைரமே வைரமே
நீ ஒன்றும் முன்பு
பெரிய மதிப்புடையோன்
அல்ல! எங்கள்
அண்ணல் பெருங்கவி
இங்குதித்த இந்நாளே
உன்பெயர் உலகறிந்தது...

முத்துவே முத்துவே
ஆழ்கடலில் நீ
வந்திட்டதால்
உனக்கு அந்தஸ்து
வந்ததென்று
எண்ணாதே!
எங்கள் தமிழவள்
ஈன்ற ஈடுணையற்ற
வைரமுத்து இந்நாள்
இங்குற்றதால்
உனக்கு வந்தது
புகழ்...

அமுதத்தினும் இனிய
தமிழ்தந்த
கறுப்பு வைரம்
புதுவகவை புகுகிறது
புதுவகவையே!
இனித்தான் உனக்கு
புகழ்...

வாழ்க வாழ்க
பெருங்கவி
பேரரசு வாழ்க
பெருமைபெற்ற
தமிழே எங்கள்
கவிப்பேரரசால்
வாழ்க...

மேகம்

உதவாமல் இருக்கின்ற
ஒன்றை தெரியாமலே
திருடி..
உதவுகின்ற வகையில்
சீரமைத்து எல்லோரும்

எல்லாம் மகிழ
தெரியக்கொடுக்கின்ற,
சொல்லாமல்
நன்மை பயக்கும்
பெருந்தகை....

சேர்த்து விடு

காற்றே உனக்கு
ஏன்
ஓர நீதி...


ஒரு பூவின்
மகரந்தத்தை
எடுத்து சென்று
இன்னொரு பூவின்
மகரந்தத்துடன்
சேர்த்து
சித்து விளையாட்டு
செய்து
ஏதேதோ உதவுகிறாய்...

எனக்கும் அவளுக்கும்
இடைவெளி
தொடர்கிறது
ஏதாவது
சித்து செய்து
சேர்த்து விடு
என்னோடு அவளை

பருவப்பார்வை

பருவ
மழைக்காககாத்திருக்கும்
பயிர்கள்போல்...

எனக்குள் தோன்றிய
உன் மீதான
காதல் செடியானது -உன்
பருவப்பார்வைக்காக காத்திருக்கின்றது...

Sunday, April 12, 2009

காதல் வாழ்க

விண்மீன்கள் ஒவ்வொன்றும் கண் சிமிட்டின,
வெட்கத்தில் நிலா.... ,
வெண் மேகம் தன்னாடை கொண்டு போர்த்திக் கொண்டது...
கற்பைக் காப்பற்றிய நீயே என் காதல் என்றது நிலா
மேகம் ஆனந்த கண்ணீரைச் சொரிந்தது....
அது பூமிக்கு மழைாக
பூமியும் பூக்களால் கவிமாலை சொரிந்தது...
நிலாமேகக் காதல் வாழ்க என்று
என் கனவு கலைந்தது

Wednesday, April 1, 2009

றோசா அருகே முள்

பிரம்மன் யார்த்த
அழகு ஓவியம்தான்
நீ

ஆனால் நீ
என்னை வெறுக்க
வார்த்தைகளால்
காயப்படுத்தியபோதுதான்
றோசாவின் அருகே
ஏன் முள்ளை
வைத்தான் என்ற
காரணம் புரிந்தது......

Tuesday, January 20, 2009

ஆசை கொள்

ஒரு பொருளை
நோக்க நேரிடலாம்
அது உங்களுக்கு
அழகாகவும் இருக்கலாம்
இல்லாமலும் இருக்கும்
அதன் தரத்தை
மதிப்பிட அருகதையுள்ளது
ஆனால் அழகாக இருந்தால்
அது தனக்கே
சொந்தமாக வேண்டும்
என்ற நினைப்பு
தவறானது
நிலவு எல்லோருக்கும்
அழகாக இருக்கின்றது
ஆனால் உன்னருகில்
இருக்க வேண்டும்
என்று நினைப்பது
எவ்வளவு மடத்தனமானது
அவ்வழகை உன்னால்
ரசிக்க மட்டுமே
முடியும் ருசிக்க முடியாது
அது போன்று
எத்தனை
அழகு மிகுந்ததாக
இருந்தாலும் ஒன்றை
நாம் ரசித்துக்கொண்டு
இருக்கலாம் ஆனால்
அது எமக்கு
சொந்தமாக வேண்டும்
என்பது
தகுதிக்கு அப்பாற்பட்டதாகவும்
இருக்கலாம்
அழகின் தரத்தை
அறிந்து ஆசைகொள்!

Sunday, January 4, 2009

(மா) மரம்

நான் ஒரு
மா மரம்
என் இளமையில்
நான் பட்ட
சில கஸ்டங்களை
சொல்கின்றேன்...

உண்ண உணவின்றி
உறிஞ்ச நீரின்றி
வெந்தணல்
வெப்பத்தில்
அவியாய் அவிந்து
நொந்து வெந்து
நூலாகி சுருங்கி
உக்கி நின்றேன்...

பார்ப்பார் எவரும்
இன்றி இன்னலே
வாழ்வாகி வாடி
வதங்கி வடிவிழந்து
கூனிக்குறுகி
நின்றேன்...

என்முன்னே
நிற்கும்
மற்றவர்களுக்கு
எல்லாம் கிடைத்தன
என்தாயும் என்ன
செய்வாள்
அவளும் சோர்வுற்று
போனாள்
ஏனெனில் நாம்
காய்க்காத
பலனின்றிய
மரங்களானதால்
பார்ப்போர்
எவரும் இல்லை
நிழலுக்கும் என்னருகே
ஒதுங்க எவரும்
வரவில்லை
ஏன் என்று
உங்களுக்கு புரியும்
இலைகள்தான்
என்னில் இல்லையே...

வேதனையையும் சோதனையையும்
நினைத்து வெந்தேன்
இருந்தும் என்
மனவுறுதி தளரவில்லை
என்றொரு ஒருநாள்
நாம் வெற்றி
வாகை சூடலாம்
என்ற நம்பிக்கையுடன்
இருந்தேன்...

இறைவன் கருணையால்
சின்ன மழை
ஒன்று பெய்தது
அதனை எனக்கான
வாய்ப்பாய் எண்ணி
விடாமுயற்சியுடன்
அதனை வைத்தே
எனக்கு உருக்கொடுக்கலானேன்
நம்பிக்கை வீண்போகவில்லை
சிறுதுளீர் பெருதுளீர்
என இலைகளை
படைத்தேன்
இம்சற்று நாட்களில்
பச்சைப்பசேல் என்று
உருவெடுத்தேன்
மெல்ல மெல்ல
காய்க்கவும் தொடங்கினேன்
தொடர்ந்து எடுத்த முயற்சியால்
காய் பழம்
என என்னை
மறைத்து பொலிவாய்
மிளிர்கின்றேன்....

எனக்கு இப்போது
தேவைகள் ஒன்றும்
இல்லை
எதிர்பார்த்த நேரம்
தேவைகளின்
அவசியப்பாடு இருந்தன

ஆனால்....
என்னை பராமரிக்க
ஓடி ஓடி
வருகின்றார்கள்
இந்த மனிதர்கள்
நிழலுக்காக என்னருகே
ஒதுங்கி ஏதோ
ஏதோ வம்பு
வாய்ச்சண்டைகள்
புரிகின்றார்கள்
மாறி மாறி
கவனிக்கின்றார்கள்...

என்னால் தனித்து
இயங்க முடியும்
சுயலாபத்திற்காக
நான் வேண்டாத
உதவிகள் அனைத்தையம்
செய்கின்றார்கள்
எல்லாம் என்னில்
இருந்து பெறுகின்ற
நன்மைக்கான
பாசாங்கு
நாடகம்தானே
குறைவான அறிவு
கொண்ட எனக்கே
இவ்வளவு புரிகின்றது
என்றால்...
ஆறறிவு கொண்ட
இம்மனிதர்களுக்கு
எவ்வளவு புரியும்...

பலன்கருதி
சேவை செய்யும்
மானிடப்பயல்களை
ஏன் படைத்தான்
இறைவன்...

இவர்களிடம் நாம்
கற்றுக்கொள்ள வேண்டியது
என்ன இருக்கின்றது
வஞ்சகம்தான்...