Sunday, April 12, 2009

காதல் வாழ்க

விண்மீன்கள் ஒவ்வொன்றும் கண் சிமிட்டின,
வெட்கத்தில் நிலா.... ,
வெண் மேகம் தன்னாடை கொண்டு போர்த்திக் கொண்டது...
கற்பைக் காப்பற்றிய நீயே என் காதல் என்றது நிலா
மேகம் ஆனந்த கண்ணீரைச் சொரிந்தது....
அது பூமிக்கு மழைாக
பூமியும் பூக்களால் கவிமாலை சொரிந்தது...
நிலாமேகக் காதல் வாழ்க என்று
என் கனவு கலைந்தது

Wednesday, April 1, 2009

றோசா அருகே முள்

பிரம்மன் யார்த்த
அழகு ஓவியம்தான்
நீ

ஆனால் நீ
என்னை வெறுக்க
வார்த்தைகளால்
காயப்படுத்தியபோதுதான்
றோசாவின் அருகே
ஏன் முள்ளை
வைத்தான் என்ற
காரணம் புரிந்தது......