தமிழ்த்தாய் வயிற்றுதித்து
மலர்ந்த
கவிப்பூங்கா
ஒன்று புது
அகவை
காணுகிறது...
வைரமே வைரமே
நீ ஒன்றும் முன்பு
பெரிய மதிப்புடையோன்
அல்ல! எங்கள்
அண்ணல் பெருங்கவி
இங்குதித்த இந்நாளே
உன்பெயர் உலகறிந்தது...
முத்துவே முத்துவே
ஆழ்கடலில் நீ
வந்திட்டதால்
உனக்கு அந்தஸ்து
வந்ததென்று
எண்ணாதே!
எங்கள் தமிழவள்
ஈன்ற ஈடுணையற்ற
வைரமுத்து இந்நாள்
இங்குற்றதால்
உனக்கு வந்தது
புகழ்...
அமுதத்தினும் இனிய
தமிழ்தந்த
கறுப்பு வைரம்
புதுவகவை புகுகிறது
புதுவகவையே!
இனித்தான் உனக்கு
புகழ்...
வாழ்க வாழ்க
பெருங்கவி
பேரரசு வாழ்க
பெருமைபெற்ற
தமிழே எங்கள்
கவிப்பேரரசால்
வாழ்க...
No comments:
Post a Comment