Saturday, July 25, 2009

இன்றும் என்வார்த்தைகள் பொய்யாது

எனக்காக வாழ்வேன்
என்றுரைத்தாய்
உனக்காக வாழ்வேன்!
பதிலுக்கு நானும்
சொன்னேன்...

இடையில் சில
நாட்கள் நகர
இன்னொருத்தனுடன்
நீ வாழ்கிறாய்...
எனக்காகவா
இன்னொருத்தனுடன்
வாழ்கிறாய்??
உன் வார்த்தைகள்
பொய்யானது.

என்வார்த்தைகள்
இன்றும் உண்மையாய்..
உனக்காக வாழ்வேன்
என்றுதான் சொன்னேன்
உனக்காக மட்டுமல்ல...
அவ்வாறெனின்
சோகத்தால் வாடி
முகமெல்லாம் தாடி...
ஈற்றில் என்னை
பெட்டியை மூடி
புதைத்திருப்பர்
பலர் கூடி...

நான் புத்துணர்வுடன்
இன்னும் எனக்காய்
என் பெற்றோருக்காய்
உறவினருக்காய்
வாழ்கிறேன்
வாழ்வேன்...
ஆனால்
இன்றும் என்
வார்த்தைகள்
பொய்யாது
போகின்றன...

No comments: