சருகாய்க் கூட
இலையின்றி
காய்ந்த மரமாய்
நின்றவேளை
என்னில்
மழையாய் பொழிந்தாய்
தரிசு நிலமாய்
நான் நாட்களை
கடத்திய வேளை
றோஜா செடியாய்
என்னில் மலர்ந்தாய்
சின்னச்சின்னதாய் உள்ள
விண்மீன்கள் நடுவே
வந்துதித்த நிலாத்தேவையடி நீ
உறக்கம் இழந்து
உறங்க மனமின்றி இருந்தேன்
உன் வருகைக்காக
உறங்குகிறேன்
கனவில் நீ வருவாய் என।
வரண்ட பூமியதில்
தாகத்தின்
கொடுமையில்
கானல் நீரை நம்பி
ஏமாந்து ஏமாந்து
இருந்த வேளை
என்னருகே மெல்லென
பாய்ந்து செல்கின்ற
நதியாய் வந்தாய்!
இப்போ நீ எங்கோ
நானெங்கோ
இருந்தும்
கொடுந்தளீர் நெருப்பின்
அணைத்து
நடுவேயென்னை
குளீர வைக்கும்
தண்ணீராய் நிந்தன்
நினைவுகள் நிழலாய் தொடர்கின்றன,,,.
No comments:
Post a Comment