ஊடுருவிய
உன் பார்வைமழுங்கிப் போன
மனதின் ஓட்டைகளை
ஒட்டியதோடு
சிதைந்து கிடந்த என்
சிந்தனையாற்றலை
திடமாக்கி
தீர்க்க தரிசனம் கொடுத்தது
வாழ்வின் இனிதான
சுழற்சிக்கு
உன் பார்வைக்குள் பல
செயலாக்கிகள் உள்ளதடி
உன்விருப்போடு என்றும்
உன்பார்வையை
இறைந்து கேட்கிறேன்.
No comments:
Post a Comment