Friday, July 24, 2009

ஒவ்வொன்றினும் உன் நினைவுகள் தொடர

என் முகம்
பார்க்க சென்று
கண்ணாடி அங்கே
முன்னாடி நின்றேன்...

எப்பவோ பார்த்த
உன் உருவம்
என் விழியின்
கருவளையத்தில்
சாய்வாய் காட்சி
தருகிறதடி...
இமைக்கவும்
பயப்படுகிறேன்
உன்மீது என்
என்இமைகள் பட்டு
விடக்கூடாதென்பதற்காக...

பூங்காவனம்
அங்கு மெல்லென
தென்றலின் தாலாட்டில்
ஆடிடும் பூக்கள்
ஒவ்வொன்றின் நடுவே
ஒளியாய் காட்சி
தர...
பூப்பறிக்க
என் கரங்கள் மறுக்குதடி...

ஒவ்வொன்றினும்
உன் நினைவுகள்
தொடர...
செயலற்றுப்போகிறேன்..

No comments: