Sunday, July 19, 2009

ஓய்வில்லை

மலை முகட்டின்
உச்சியில் இருந்து
தடைகள் தாண்டி
வளைவு சுழிவுகள் என
கட்டுப்படுத் முடியாமல்
ஒடி வரும்
ஒரு அருவியாய்
நான்
எனக்காய் காத்திருக்கும்
கடலாய் நீ...

என்னை நான்
நினைத்தாலும்
கட்டுப்படுத்த முடியாது
உன்னை அடைந்த பின்னே
என்
பயணம் ஓயும்
அதுவரை ஓய்வில்லை எனக்கு!



No comments: