Wednesday, August 19, 2009

சந்தேகம்

உலகிலாயிரம் கோடி
வாயில்வரா
நோய்கள் பல
இருந்தும் இதுவொன்றும்
புது நோயல்ல
எவரிடமும் எளிதில்
ஊடுருவி தாக்கவல்ல
தொற்றுக்கிருமி
சத்தம் இல்லாமல்
உள்ளே இருந்து
உயிரை உறிஞ்சும்
உயிர் கொல்லி

வறுமையிலும்
வாழலாம்
சிறுமையுள்ளும்
சீர்தூக்கலாம்
ஏன் எனில்
நிம்மதி அங்கிருக்கு
நிம்மதி கெடுத்து
அமைதி குலைத்து
அழிய வைக்கும்
சந்தேகம் வராவிட்டால்.

கணவன் மனைவி
மீது பாய
மனைவி கணவன்
மீது பாய
தூண்டி தூண்டி
மனக்கிளர்ச்சிகளை
உண்டுபண்ணி
ஈற்றில்
நீதிமன்ற வாசல்படி
ஏறவைத்து
இருவரையும்
எல்லோரும் இவர்களை
எள்ளி நகையாடி
வாயில் வருவது
பேச வைக்கிறது.

சந்தேகம் யாரையும்
விட்டு வைப்பதில்லை
தெய்வத்தை கூட
ராம பிரான்
உலகம் தப்பாய்
கதைக்கும் என
சீதா பிராட்டியில்
சந்தேகப்பட்டார்
பிராட்டியையும் இழந்தார்!

சந்தோசம் காண
சந்தேகம் விலக்கி
சந்ததி போற்ற
வாழ்வு மானிடமே"


By
K.ஜயதீசன்(இலட்சியன்)

Tuesday, August 18, 2009

பணத்தின் வெம்மையில் கருகிய காதல்

காதல் யாரைத்தான்
விட்டு வைத்தது
ஒவ்வொரு மனங்களிலும்
காதல் காற்று
லேசாய் தொட்டு
செல்ல மறுப்பதில்லை
அதனை பற்றிக்கொள்ளும்
மனங்களும் உண்டு
போனால் போகட்டும் போ என்று
விட்டுச் செல்லும் உள்ளங்களும் உண்டு!


கீதன், நிதா
என்கிற இரு உள்ளங்களை
தன்விரிந்த போர்வையால்
போர்த்திக்கொண்டு
விலக விடாமல்
மூடிக்கொள்கிறது காதல்
எல்லையில்லா காதல் வானிடை
இறக்கையின்றி பறக்கும்
அதிசயப் பறவைகளானார்கள்

நகமும் சதையும் போல
ஒருவரை ஒருவர்
இணைபிரியாது
இவர்கள் காதலில் மூழ்கினார்கள்
அதனால்
இடைவிடாது
தொடர்கிறது
காதல் யாத்திரை
கரடு முரடுகள்
மேடுபள்ளம்
வீதியிலும் வீதியோரத்திலும்
நதியிலும் நதியோரத்திலும்
எங்கும் செல்வோம்
எதிலும் நம்காதல் சொல்வோம்
என்று தொடர்ந்து
பயணிக்கிறது இவர்கள் காதல்பயணம்.


பரந்து விரிந்த
காதல் கடலிடை
நீச்சலடிக்கும்
ஜோடி மீன்களாய்
கீதனும், நிதாவும்

ஆனால்
இவர்கள்
குடும்பப்பின்னணி
வேறு விதமாக
அமைகிறது
அங்குதான் ஏற்றத்தாழ்வுகள்
புரையோடுகின்றன...
வெவ்வேறு
கோடுகளில்
அவர்கள் குடும்ப
சக்கரங்கள் சுழன்று
செல்கின்றன
பணத்தின் மேல்
படுக்கும் அளவிற்கு
கீதன் வாழ்கின்றான்
அன்றாடம் காச்சியாய்
இருக்கின்றாள்
நிதா

கீதன் நிதா
காதல் கதை
அவரவர்
குடும்ப முகவரியை
எட்ட
துள்ளிக்குதிக்கின்றார்
கனவான்
கீதனின் தகப்பன்


ஒரு வேளைக்
கஞ்சிக்கே வழியில்லா
பிச்சைக்கார......
என்று
இஞ்ஞனம்
பணத்திமிர்
வார்த்தைகளை
அள்ளி வீசுகிறது

நீ அவளை
இனி பார்க்க
போனாய் என்றால்
உனக்கு இங்கு
இனி இடமில்லை என்றும்

அதுமட்டுமன்றி
எங்களை உயிருடன்
பார்க்க முடியாது என்றும்
கடினமான பூட்டால்
அவனது காதல் கதவை
பூட்டி விட
செய்வதறியாது தவிர்க்கின்றான்.

பெற்றோர் மீது
கொண்ட பற்று எனும்
நெருப்பால் இவன் காதல்
எரிந்தது.
சீக்கிரமே
பணத்தால் உயர்ந்த
பெண்ணுக்கு இவன்
மாலையிடவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

ஏழையின் வயிற்றில்
உதித்தது தப்பா ?
பணக்காரனை காதலித்தது தப்பா?
நிதா வேதனையில்
நொந்து வெந்து
நூலாகிறாள்
நீரில்லா குளத்தில்
நீச்சலடிக்க முனைந்த மீனாய்
இவள் கதை இவ்வாறு...

பணத்தின் வெம்மையில்
கருகிய காதலாய்
இவர்கள் காதல்
மாறியது!

Monday, August 17, 2009

Love

கனவில் காதலிக்கு உம்மா

ஏன்
இவ்வளவு
தாமதம் ...
என்று கண்ணன் சொல்ல


இன்று
பஸ் கொஞ்சம்
லேட்டாகிவிட்டது
ராதா பதிலளித்தாள்


அன்புக்கோபம்
காட்டினான்
கண்ணனவன்

அவளும் பதிலுக்கு
கோபிக்காதடா
கண்ணா
என் செல்லம் எலா நீ

ஐஸ் வைக்காத
என்னை
காக்க வைத்து விட்டு
என்றான் இவன்.

அப்படி இப்படி
என்று
கோபம் இருவருக்கு
அன்பாய் மாற
அவள் முதலில்
மெல்ல முத்தம் இட்டாள் கன்னத்தில்

ஐயா விடுவாரா
பதிலுக்கு
ஊ ஊ ஊ
உதட்டை நீட்டி
உம்மா கொடுக்க போனார்
அந்த சமயம்
அம்மா இவருக்கு ரீ கொண்டுவர
அண்ணார்ந்து படுத்திருந்து
கனவில் காதலிக்கு
உம்மா கொடுக்கும் இவரைப்பார்த்து
அம்மாவுக்கு கடுப்பு வர
சுடு ரீ யை உதட்டில் தெளித்துவிட
தம்பி கண்ணனுக்கு கனவு தெளிந்து
ஆய் என்று கத்தினார்....

By.
K.Eலட்சியன்

Sunday, August 16, 2009

"சின்னதாய் ஒரு புன்னகை செய்"


கனலென கோபம் -உன்
ஞாபகம் மறைத்து
மதியை வென்று
கதியை மாற்றும்
வழியது காணாதே!
கோபமடக்கி
சிறிதாய்
புன்னகைத்திடு....

பிறர் சொல்வது
சிலவேளையதில்
தப்பாய்ப்பட்டால்
சினம் உன்னை
ஆட்கொணரும்
வகையது தோணில்
சின்னதாய் ஒரு புன்னகைத்திடு....

பெரியோர்
சொன்னதாய்
சிறிதோர் ஞாபகம்
கோபம் பின்னது
பாவமாய் அமையும் என்று,
வாழ்விலும் கண்டேன்!
கோபம் கண்டேல்
மெல்லதாய் ஒரு
புன்னகை செய்!

மூத்தோர் சொல்லது
பழுத்த ஞானச்சொல்
எமக்கது புதிதாய்
எரிச்சலை உண்டு பண்ணலாம்,
மெதுவாய் சினம் அடக்கி
சிறிதாய் புன்னகைத்திடு...

சினம் சினம்
வெஞ்சினம்
கொண்டு
தனக்கு தானே
நஞ்சினையூட்டியவர்
எத்தனை எத்தனையென
வரலாறு சொல்லும்
வகையது பார்த்து
அடக்கி சினத்தை
அழகாய் புன்னகைத்திடு....

கொபம் கொள்வது
தப்பன்று அது
தன்னை ஆழ விடுவது
ஆபத்தை தரும்
எனும் நெறியறிந்து
ஒழுகிடு....
முகமலர்ந்து
எவரையும் அடக்கிட
உனக்கு ஓர்
வசீக மொழியுண்டு
அதுதான் புன்னகை!


By.
K.Eலட்சியன்

Thursday, August 13, 2009

காதல் சுகமானதா?

காதல் சுகமானதா?

தூக்கத்தில் நடக்கிறேன்
தனிமையில் ஏதேதோ பேசுகிறேன்,
கண்கள் மூடினாலும்
தூக்கம்வர மறுக்கிறது,
ஒவ்வொரு நொடியும்
ஒவ்வொருயுகமாக தோன்றுகிறது,
அன்பாய் பேசும்
அம்மாவிடம் எரிந்து விழுகிறேன்,
அம்மா அப்பா
பெரிதாய் தெரியவில்லை,
புத்தகம் திறந்தால்
புத்தகத்துடன் கதைக்கிறேன்
பக்கத்தில் நண்பன்
பைத்தியமாடா? என்று கேட்கிறான்,
படிப்பில் நாட்டமில்லை,
எல்லா முகத்திலும் அவளே தெரிவதால்
காணும் ஒவ்வொரு பெண்ணையும்
பார்த்து பல்லிளிக்கிறேன்,
இவ்வளவும் வழமைக்கு மாறாக
நடக்கின்றன
அப்படியென்றால் காதல் சுகமானதா?
இல்லை இல்லை காதல் பெரும் அவஸ்தை...


அன்புடன்
க.Eலட்சியன்

Monday, August 10, 2009

பனிச் சாரல் கொண்டு - உன்முகம் துடைப்பேன்....

பனிச் சாரல் கொண்டு - உன்
முகம் துடைப்பேன்
மழைத்தூறலில் மஞ்சள் கரைத்து
உனை நீராட்டுவேன்!

பூக்களின் மகரந்தம் அரைத்து
உன்னில் பூசி
நறுமணமாக்குவேன்!

வெண்பாக்கள் தொடுத்து
உன்பால் கவிபுனைவேன்
செந்தமிழ் சிலவெடுத்து - உன்
செந்நிற அழகை
செதுக்கிடுவேன் வரிகளில்!

கம்பளமாக விரியும்
பச்சைப்புல்வெளியில்
உனக்கெனவும் எனக்கெனவும்
மலர்களாலான பாயொன்று விரித்திட்டு
அங்கே உட்கார்ந்து இருவரும்
அண்ணார்ந்து ஆகாய நிலவை
சாட்சியாய் வைத்து
காதல் சல்லாபம் புரிவோம்
விண்மீன்கள் வெட்கத்தில
ஒருகண் மறைத்து
ஓரக்கண்ணால் எமைப்பார்த்து
பவ்விய சிரிப்பு சிரிக்கட்டும்!

ஓவியர் பலரை அழைத்து
உன்னழகை நான்சொல்
வரைந்திட நிறச்சேர்க்கைக்கு
வானவில்லை வரவழைப்பேன்....

கவிவல்லோரை அழைத்து
காவியம் படைத்திட
மானியமாய் அவர்களுக்கு
தானியம்போல் தங்கம் கொடுப்பேன்!

தொடரும்.......

என்சிந்தனையில் ஏற்பட்ட தடங்களுக்கு வருந்துகிறேன் யாவும் கற்பனை.

Sunday, August 9, 2009

உடன்பிறப்புக்கள்

அன்னை
என்னை பெற முன்பே!
உம்மை எனது
வழிகாட்டிகளாய்
ஈன்றெடுத்து
பரிசளித்தாள்!

கரடு முரடான
பாதை அதை
இலகுவாக்க
முன்னே வந்தனர்
என் சோதரர்
பின்னே எனக்கென்ன
தெரியும் கஸ்டம் என்றால்!


எங்கிருந்து
இன்னல்கண்டாலும்
நல்வழிகாட்டும்
கலங்கரை
விளக்குகள்
அவர்களே!


எப்படி வாழணும்
என்பதை
அவர்கள்
வாழ்ந்து கொண்டே
காட்டுகின்ற
என் வரலாற்று
செதுக்கிகள்!


தான் பட்ட துன்பங்கள்
தன்தம்பி படக்கூடாது என
தன்னலம் அற்று
தடையகற்றியவர்கள்!


எனக்குத்துணைகளாய்
என்னைப்பொறுத்தவரை
இறைவன் தந்த
ஈடற்ற பொக்கிஷங்கள்!


வாழணும் என்றும்
சோதரரே
உம்மோடு ஒன்றுபட்டு
என்றுதான் இன்றும்
என்றும் இறைவனை
பிராத்திக்கின்றேன்!


கண்ணை இமை
காப்பது போல்
என்னை நீவீர் காக்கும்
பாதுகாப்பு
சுவர்கள் நீங்களே!

என்றுமே
குறையாது
சுரக்கின்ற
பாசத்தின்
சுரப்பிகள்!

எப்பிறப்பிறப்பிலும்
எவ்வாறு பிறப்பினும்
எனக்கு நீவீர்
உடன்பிறப்புக்களாய்
பிறந்திடுவீர்! என்
இரத்த உறவுகளே!

Monday, August 3, 2009

உன்வருகையை எதிர்பார்த்து!

பெண்ணே!
உனக்காக
இறைவனை
பிராத்திக்க முடியாதுள்ளது
ஏனெனில்
என்மனத்தை நீ
சிறைப்பிடித்துவிட்டாய்
மனம் இல்லாமல்
எப்படி இறைவனை
பிராத்திப்பேன்...

கண்ணே!
கடவுளைப் பூசிக்க
பூக்கள் இல்லை
என்னிடம்...
எல்லாப்பூக்களையும்
நீ வரும் பாதையில்
தூவி விடுவதால்...

என்னவளே!
மூளைக்கு தகவல்
வழங்கியான மூளியின்
கட்டளையை
கால்கள் ஏற்க மறுக்கின்றன
ஏனெனில்
உன்னை நோக்கி
வருவது என்கால்களுக்கு
பழக்கமாகிவிட்டதால்...

பெண்ணே!
இரவில்
எனக்குப் பக்கத்தில்
உனக்காய் ஒரு
படுக்கையை விரிக்கிறேன்
பூக்களால்.
கனவில் நீ வருவாய்
என்ற
நம்பிக்கையில்.....


எல்லோரும்
உறங்கிய பின்
எனக்கும் நிலவுக்கு
நிழல் யுத்தம் நடக்கிறது
என்னவளிடம்
எனக்காய்
தூது செல்ல
நிலா மறுப்பதால்...


அன்போடு அம்மாவின்
அழைப்பு
ஆத்திரத்தில்
எரிந்தவிடுகிறேன்
உன்னைப்பற்றிய
சிந்தனையை
சிதறடித்ததற்காக...

என் இதயத்துள்
கோயில் ஒன்று
கும்பாபிஷேகத்திற்கு
தயாராக...
நீதான் கடவுள்
உன்வருகையை
எதிர்பார்த்து நான்....


என்றும் உயிர்ப்புடன் என்காதல்

நாதியற்று
நானிருந்த வேளையது
தேதிசொல்லி
காதல் சொன்னாய்
என்பேறு என்றெண்ணி
ஆனந்தத்தில்
மிதந்தேன்
சில நாளதில்
கைவிட்டாய்
கழுத்தறுத்தாய் நீ
இன்று
நட்டாற்றில்
நாதியற்ற
கைப்பொம்மையாய்
தண்ணீரீல்
அடித்செல்லப்படுகிறேன்...

உன்வார்த்தைகள் எங்கே
உன்பொய்மையில்
உன் காதல் செத்தது
என்றும் உயிர்ப்புடன்
என்காதல்..

Sunday, August 2, 2009

நித்தம் முத்தம் சத்தத்துடன்




யுத்தமோ


முத்தமோ


சத்தத்துடன்....


நீயும் நானும்


ஒன்றையொன்று


ஈர்க்கும்


ஏற்ற காந்தங்கள்


முத்தத்தில்தான்


ஒட்டிக்கொள்வோம்...



மழையென வந்து


துளியென தூறி


மண்ணென ஆன


பெண்ணெ


உனக்கிடும்


முத்தங்கள் ஆயிரமாயிரம்....



அலையென தாவி


கரையான உனக்கு


இட்டுடுவேன்


இச்சை முத்தங்கள்


எக்கணமும்...



ஆண்மேகம் நான்


பெண்மேகம் நீ


மோதிக்கொண்டு


முத்தமிட


எச்சைகளாக


மழைநீர்....



நித்தம்


முத்தம்


சத்தத்துடன்......



காதல் பிறந்து ஓராண்டாகிறது .......சிறுகதை........

....விடியவதற்கு 2 மணித்தியாலயங்கள் இருக்கும்போதே எழும்பி விட்டாள் கேமா, என்றும் இல்லாதவாறு மகிழ்வுடனும், புதுதெம்புடனும் காணப்பட்டாள், வேக வேகமாக காலைக்கடன்கடன்களை முடித்துவிட்டு வருவதற்கும் அவளது அப்பா அம்மா நித்திரைவிட்டு எழும்புவதற்கு கணக்காக இருந்தது, ஒரு போதும் அவள் அப்படி எழும்புவதில்லை, இன்று மட்டும் தாம் எழும்பு வதற்கு முன்பே எழுந்து , எல்லாக்காரியங்களையும் முடித்துவிட்டு தங்களுக்கு தேனீர்க்கப்புடன் வணக்கம் சொல்லி நின்ற கேமாவை பார்த்து வியப்படைந்தனர் அவளது அம்மாவும், அப்பாவும் தம்பியும், என்ன கேமா இன்று மழைகட்டாயம் வரும்போல இருக்கே என்று வியப்புக்குறி சொன்னார்கள், இதைக்கேட்ட அவளுக்கு உள்ளுக்குள் மழை பெய்த சந்தோசம்தான் ஏற்பட்டது, அவர்கள் சொன்னதற்கு அல்ல அவளது காதலுக்கு ஒரு வயதாகிறது என்ற மகிழ்ச்சியில்... கேமா மெல்ல சென்ற ஆண்டின் நண்பர்கள் தின நிகழ்வுகளுக்கு மூழ்கினாள், ஆகாஷ் கேமாவின் நண்பன் பள்ளிக்கூடத்தில் சேர்ந்ததில் இருந்து இருவரும் இணைபிரியா நண்பர்கள் படிப்பு, விளையாட்டு, பொழுதுபோக்கு, எதுவாகினும் எங்கு சென்றாலும் அவர்கள் கூடுதலாக பிரியா நண்பர்களாகவே இருந்தனர். அவர்களுக்குள் ஒருவருக்கொருவரை விட்டுக்கொடுக்கின்ற பண்பு, எந்த விடயத்தையும் மனம்விட்டு பேசிக்கொள்கின்ற மொத்தத்தில் அந்த நட்பு இணை அவர்களே...இருந்தும் அவர்களுக்குள் காதல் அவர்களை அறியாமலே முளைவிட்டது, அதுவரை நண்பர்களாக பழகி வந்தவர்களுக்கு ஆகஸ்ட்02, 2008 அன்றைய நண்பர்கள் தினம் ஒரு சபாலாகவே அமைந்து விட்டது, காலையிலே வருவதாக கூறிய ஆகாஷை எதிர்பார்த்து கடற்கரையில் மெல்ல அங்கும் இங்கு நடந்த வண்ணம் இருந்தாள் கேமா, சில நிமிடங்களில் ஆகாஷ் வந்தான் கையில் ஒரு பொக்கையுடன், வந்தவன் அந்த பொக்கையை கொடுத்து ஐ லவ் யூ கேமா என்று எந்தவித தயக்கமும் இன்றி சொன்னான், கேமா இதை எதிர்பார்க்கவே இல்லை, வியப்பில் விழிகள் அகன்றன, இருந்தும் உள்மனது மகிழ்ச்சியில் துள்ளியது, சுதாகரித்துக் கொண்டு இப்படி திடிரென்று சொன்னால் எப்படி என்று கேட்டாள் , கேமா இனியும் நாம் நண்பர்கள் தினத்தை தப்பாக பயன்படுத்தக்கூடாது, நட்பு தந்த காதல் பரிசு நீயே என்று கவிவடிவில் வார்த்தைகளை வழங்கினான் கேமா மெல்லென புன்முறுவல் செய்து காதலுக்கு பச்சைக்கொடி காட்டினாள் , நண்பர்கள் தினம் காதலுக்கு பிள்ளையார் சுழி போட்டது. ...... நினைவு மீள கேமா ஆகாஷ்யுடன் 2வது காதல் ஆண்டை கொண்டாட கடற்கரையை நோக்கி புறப்பட்டாள்.

Saturday, August 1, 2009

நட்"பூ"


பூமிகொண்ட
பூக்கள் கோடி
புனிதமிகு
பூக்கள் பல
காலைதோன்றி
"மாலை"யாய்
மடியும் காண்
சிற்சில
மாலைவந்து
காலையிலே வாடி வதங்கி விடும்॥
வருடங்கள் கழிந்தும்
வாடாதிது
அழ"கு"ன்றாக
அழிவுறாதிது
யுகங்கள் கடந்தும்
கடக்குமிது
காவியமாய்
அதுவே
நல் நட்"பூ"