Sunday, August 2, 2009

காதல் பிறந்து ஓராண்டாகிறது .......சிறுகதை........

....விடியவதற்கு 2 மணித்தியாலயங்கள் இருக்கும்போதே எழும்பி விட்டாள் கேமா, என்றும் இல்லாதவாறு மகிழ்வுடனும், புதுதெம்புடனும் காணப்பட்டாள், வேக வேகமாக காலைக்கடன்கடன்களை முடித்துவிட்டு வருவதற்கும் அவளது அப்பா அம்மா நித்திரைவிட்டு எழும்புவதற்கு கணக்காக இருந்தது, ஒரு போதும் அவள் அப்படி எழும்புவதில்லை, இன்று மட்டும் தாம் எழும்பு வதற்கு முன்பே எழுந்து , எல்லாக்காரியங்களையும் முடித்துவிட்டு தங்களுக்கு தேனீர்க்கப்புடன் வணக்கம் சொல்லி நின்ற கேமாவை பார்த்து வியப்படைந்தனர் அவளது அம்மாவும், அப்பாவும் தம்பியும், என்ன கேமா இன்று மழைகட்டாயம் வரும்போல இருக்கே என்று வியப்புக்குறி சொன்னார்கள், இதைக்கேட்ட அவளுக்கு உள்ளுக்குள் மழை பெய்த சந்தோசம்தான் ஏற்பட்டது, அவர்கள் சொன்னதற்கு அல்ல அவளது காதலுக்கு ஒரு வயதாகிறது என்ற மகிழ்ச்சியில்... கேமா மெல்ல சென்ற ஆண்டின் நண்பர்கள் தின நிகழ்வுகளுக்கு மூழ்கினாள், ஆகாஷ் கேமாவின் நண்பன் பள்ளிக்கூடத்தில் சேர்ந்ததில் இருந்து இருவரும் இணைபிரியா நண்பர்கள் படிப்பு, விளையாட்டு, பொழுதுபோக்கு, எதுவாகினும் எங்கு சென்றாலும் அவர்கள் கூடுதலாக பிரியா நண்பர்களாகவே இருந்தனர். அவர்களுக்குள் ஒருவருக்கொருவரை விட்டுக்கொடுக்கின்ற பண்பு, எந்த விடயத்தையும் மனம்விட்டு பேசிக்கொள்கின்ற மொத்தத்தில் அந்த நட்பு இணை அவர்களே...இருந்தும் அவர்களுக்குள் காதல் அவர்களை அறியாமலே முளைவிட்டது, அதுவரை நண்பர்களாக பழகி வந்தவர்களுக்கு ஆகஸ்ட்02, 2008 அன்றைய நண்பர்கள் தினம் ஒரு சபாலாகவே அமைந்து விட்டது, காலையிலே வருவதாக கூறிய ஆகாஷை எதிர்பார்த்து கடற்கரையில் மெல்ல அங்கும் இங்கு நடந்த வண்ணம் இருந்தாள் கேமா, சில நிமிடங்களில் ஆகாஷ் வந்தான் கையில் ஒரு பொக்கையுடன், வந்தவன் அந்த பொக்கையை கொடுத்து ஐ லவ் யூ கேமா என்று எந்தவித தயக்கமும் இன்றி சொன்னான், கேமா இதை எதிர்பார்க்கவே இல்லை, வியப்பில் விழிகள் அகன்றன, இருந்தும் உள்மனது மகிழ்ச்சியில் துள்ளியது, சுதாகரித்துக் கொண்டு இப்படி திடிரென்று சொன்னால் எப்படி என்று கேட்டாள் , கேமா இனியும் நாம் நண்பர்கள் தினத்தை தப்பாக பயன்படுத்தக்கூடாது, நட்பு தந்த காதல் பரிசு நீயே என்று கவிவடிவில் வார்த்தைகளை வழங்கினான் கேமா மெல்லென புன்முறுவல் செய்து காதலுக்கு பச்சைக்கொடி காட்டினாள் , நண்பர்கள் தினம் காதலுக்கு பிள்ளையார் சுழி போட்டது. ...... நினைவு மீள கேமா ஆகாஷ்யுடன் 2வது காதல் ஆண்டை கொண்டாட கடற்கரையை நோக்கி புறப்பட்டாள்.

No comments: