அன்னை
என்னை பெற முன்பே!
உம்மை எனது
வழிகாட்டிகளாய்
ஈன்றெடுத்து
பரிசளித்தாள்!
கரடு முரடான
பாதை அதை
இலகுவாக்க
முன்னே வந்தனர்
என் சோதரர்
பின்னே எனக்கென்ன
தெரியும் கஸ்டம் என்றால்!
எங்கிருந்து
இன்னல்கண்டாலும்
நல்வழிகாட்டும்
கலங்கரை
விளக்குகள்
அவர்களே!
எப்படி வாழணும்
என்பதை
அவர்கள்
வாழ்ந்து கொண்டே
காட்டுகின்ற
என் வரலாற்று
செதுக்கிகள்!
தான் பட்ட துன்பங்கள்
தன்தம்பி படக்கூடாது என
தன்னலம் அற்று
தடையகற்றியவர்கள்!
எனக்குத்துணைகளாய்
என்னைப்பொறுத்தவரை
இறைவன் தந்த
ஈடற்ற பொக்கிஷங்கள்!
வாழணும் என்றும்
சோதரரே
உம்மோடு ஒன்றுபட்டு
என்றுதான் இன்றும்
என்றும் இறைவனை
பிராத்திக்கின்றேன்!
கண்ணை இமை
காப்பது போல்
என்னை நீவீர் காக்கும்
பாதுகாப்பு
சுவர்கள் நீங்களே!
என்றுமே
குறையாது
சுரக்கின்ற
பாசத்தின்
சுரப்பிகள்!
எப்பிறப்பிறப்பிலும்
எவ்வாறு பிறப்பினும்
எனக்கு நீவீர்
உடன்பிறப்புக்களாய்
பிறந்திடுவீர்! என்
இரத்த உறவுகளே!
2 comments:
என்றுமே
குறையாது
சுரக்கின்ற
பாசத்தின்
சுரப்பிகள்!
very good machcho!
thanks machchaan
Post a Comment