Sunday, August 16, 2009
"சின்னதாய் ஒரு புன்னகை செய்"
கனலென கோபம் -உன்
ஞாபகம் மறைத்து
மதியை வென்று
கதியை மாற்றும்
வழியது காணாதே!
கோபமடக்கி
சிறிதாய்
புன்னகைத்திடு....
பிறர் சொல்வது
சிலவேளையதில்
தப்பாய்ப்பட்டால்
சினம் உன்னை
ஆட்கொணரும்
வகையது தோணில்
சின்னதாய் ஒரு புன்னகைத்திடு....
பெரியோர்
சொன்னதாய்
சிறிதோர் ஞாபகம்
கோபம் பின்னது
பாவமாய் அமையும் என்று,
வாழ்விலும் கண்டேன்!
கோபம் கண்டேல்
மெல்லதாய் ஒரு
புன்னகை செய்!
மூத்தோர் சொல்லது
பழுத்த ஞானச்சொல்
எமக்கது புதிதாய்
எரிச்சலை உண்டு பண்ணலாம்,
மெதுவாய் சினம் அடக்கி
சிறிதாய் புன்னகைத்திடு...
சினம் சினம்
வெஞ்சினம்
கொண்டு
தனக்கு தானே
நஞ்சினையூட்டியவர்
எத்தனை எத்தனையென
வரலாறு சொல்லும்
வகையது பார்த்து
அடக்கி சினத்தை
அழகாய் புன்னகைத்திடு....
கொபம் கொள்வது
தப்பன்று அது
தன்னை ஆழ விடுவது
ஆபத்தை தரும்
எனும் நெறியறிந்து
ஒழுகிடு....
முகமலர்ந்து
எவரையும் அடக்கிட
உனக்கு ஓர்
வசீக மொழியுண்டு
அதுதான் புன்னகை!
By.
K.Eலட்சியன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment