Thursday, July 16, 2009

அஞ்சோம்

உன்னோடு நானும்
என்னோடு நீயும்
சேரும் நாட்களுக்கு
காத்திருக்க
வேண்டியதில்லை॥

செந்நிற அழகை
அந்த நிலத்தில்
பெய்யப்பட்ட மழை நீர்
பெற்று கலந்து விடுவது
போல உன் உள்ளமும்
என் உள்ளமும்
இரண்டற கலந்து
விட்டென॥

இனி நம்மை
பிரிக்க முடியாது
சில வேளை
விதி பிரித்தால்
அந்த விதியையும்
வெல்ல
உலகத்தை விட்டுப்
பிரியவும் அஞ்சோம்॥

மரணத்தையும் வெல்வோம்

உன் மனதையும்
என் மனதையும்
இறுக கட்டிவிட்டான்
இறைவன் ...

பின்னிப்பிணைந்து விட்டன
என் இதயமும்
உன் இதயமும்॥

இனி அந்த
கடவுளே
நினைத்தாலும்
எமை
பிரிக்க முடியாது॥

மரணம் எமை
தன் தழுவிக்கொண்டாலும்
அந்த மரணத்தையும்
வெல்வோம்....