உன்னோடு நானும்
என்னோடு நீயும்
சேரும் நாட்களுக்கு
காத்திருக்க
வேண்டியதில்லை॥
செந்நிற அழகை
அந்த நிலத்தில்
பெய்யப்பட்ட மழை நீர்
பெற்று கலந்து விடுவது
போல உன் உள்ளமும்
என் உள்ளமும்
இரண்டற கலந்து
விட்டென॥
இனி நம்மை
பிரிக்க முடியாது
சில வேளை
விதி பிரித்தால்
அந்த விதியையும்
வெல்ல
உலகத்தை விட்டுப்
பிரியவும் அஞ்சோம்॥