Tuesday, July 28, 2009

யாசகன்


இருகரங்கள்
நீட்ட உன்னை என்னால்
எட்ட முடியவில்லை
நட்பே...

அன்றாடம் நாம்
பரிமாறிக் கொள்ளும்
பண்பான
வார்த்தைகள்
பரிவட்டம் வீச
பற்றிக்கொள்கிறேன்
உன் இனிய நட்பை...

என்
மனக்காயங்கள் போக
உன்
மனக்கரங்களை நீட்டி
தடவும் இனிய
வார்த்தைகளுக்காக
ஏங்கி நிற்கும் நான் உன்
நட்பை யாசிக்கும்
யாசகன் ....

உன் பார்வையை இறைந்து கேட்கிறேன்




ஊடுருவிய
உன் பார்வை
மழுங்கிப் போன
மனதின் ஓட்டைகளை
ஒட்டியதோடு
சிதைந்து கிடந்த என்
சிந்தனையாற்றலை
திடமாக்கி
தீர்க்க தரிசனம் கொடுத்தது
வாழ்வின் இனிதான
சுழற்சிக்கு
உன் பார்வைக்குள் பல
செயலாக்கிகள் உள்ளதடி
உன்விருப்போடு என்றும்
உன்பார்வையை
இறைந்து கேட்கிறேன்.