Thursday, July 30, 2009

கண்ணெதிர் தோன்றி

கண்ணெதிர் தோன்றி
காட்சி கொடுத்து
பின்னரை நொடியில்
மின்னலாய் மறைகிறாய்!

வரட்சியாய் நான்
துளித்துளியாய் நீ(ர்) -என்
விழியகல
விடைபெறுகிறாய் ஏன்?

கருவுடையாள் பெண்
உருத்தருவாளவள்,
நீயும் பெண்தானே
நான் சுமக்கும்
உன்மீதான காதலின்
கருவறுப்பதேன்?

மேகமாய் நான்
வெண்ணிலா நீ
உனைக்கடந்து
செல்கின்றேன் - எனை
கைத்தலம்பற்றிக் கொள்வாயா?

ஊசலாடும் என்
மனதின்
நிறுத்த கையிறாக
நீ இருக்கிறாய்
நீட்டாதே இன்னும்
நாளை நாளை
என்று!

என் வாழ்வு
இருளாகிறது
முழுமையாய் உன்
முகம் காட்டு
என் நிலவே.