பெண்ணே!
உனக்காக
இறைவனை
பிராத்திக்க முடியாதுள்ளது
ஏனெனில்
என்மனத்தை நீ
சிறைப்பிடித்துவிட்டாய்
மனம் இல்லாமல்
எப்படி இறைவனை
பிராத்திப்பேன்...
கண்ணே!
கடவுளைப் பூசிக்க
பூக்கள் இல்லை
என்னிடம்...
எல்லாப்பூக்களையும்
நீ வரும் பாதையில்
தூவி விடுவதால்...
என்னவளே!
மூளைக்கு தகவல்
வழங்கியான மூளியின்
கட்டளையை
கால்கள் ஏற்க மறுக்கின்றன
ஏனெனில்
உன்னை நோக்கி
வருவது என்கால்களுக்கு
பழக்கமாகிவிட்டதால்...
பெண்ணே!
இரவில்
எனக்குப் பக்கத்தில்
உனக்காய் ஒரு
படுக்கையை விரிக்கிறேன்
பூக்களால்.
கனவில் நீ வருவாய்
என்ற
நம்பிக்கையில்.....
எல்லோரும்
உறங்கிய பின்
எனக்கும் நிலவுக்கு
நிழல் யுத்தம் நடக்கிறது
என்னவளிடம்
எனக்காய்
தூது செல்ல
நிலா மறுப்பதால்...
அன்போடு அம்மாவின்
அழைப்பு
ஆத்திரத்தில்
எரிந்தவிடுகிறேன்
உன்னைப்பற்றிய
சிந்தனையை
சிதறடித்ததற்காக...
என் இதயத்துள்
கோயில் ஒன்று
கும்பாபிஷேகத்திற்கு
தயாராக...
நீதான் கடவுள்
உன்வருகையை
எதிர்பார்த்து நான்....