Thursday, April 15, 2010

பரிசு


அன்னை காட்டும்

அற்புதமான அன்பின்

அடையாளம் முத்தம் ........


இவ்வளவு பெறுமதி மிக்க

பரிசை கேட்காமலே அன்னை தருவாள்!

Wednesday, April 7, 2010

இலட்சியனின் கிறுக்கல்கள்: மாறாத மாற்றங்கள்

இலட்சியனின் கிறுக்கல்கள்: மாறாத மாற்றங்கள்

உனக்காய் ஓர் இருவரிகள் உரைக்காதிருந்தால் என் நா'வாய் இருக்காது...


வாழ்வில்
கரடு முரடுகள்
எங்கும் பரவி விரவி
மலிந்து கிடக்க
அதிலுலன்று பாடாய்
படும் வேதனை கண்டு
விரைந்து வருகிறாய் துணையாய் நீ - நம்பிக்கையே!!!

தேடித் தேடி
அலைகிறேன்
நிம்மதியை நாடி -நான்
வாடிவதங்கி நிற்கும் வேளைதனில்
ஓடி வருகிறாய் உற்ற தோழனாய் நீ
கோடி நன்றிகள் உனக்காய்
மேடாய் அடிக்கினும்
உந்தனக்கு ஈடாய் அமையாது
இவ்வுலகில் - நம்பிக்கைகே!!!

வெறுப்பாய் இருக்கும்
இருக்கவே இவ்வுலகில்
தொல்விகள் அவமானங்கள் கண்டு,
பொறுப்பா வாறேன்
நான் இருப்பாய் உன்னிடம்
இருக்கும் போது
ஏனப்பா வெறுப்பாய்
இருக்கிறாய் வாழ்வில்
என்று கேட்பாய் நீ - நம்பிக்கையே!!!

ஊரும் இல்லை
உறவும் இல்லை இங்கு
நீ மட்டும் என்றுமே என்னோடு
நம்பிக்கையே!!

உனக்காய் ஓர்
இருவரிகள்
உரைக்காதிருந்தால் என்
நா'வாய் இருக்காது
இருப்பாய் எனக்காய் என்று
விருப்பாய் இருக்க இவ்வாழ்வு என்றும் - நம்பிக்கையே!!!

Sunday, April 4, 2010

சாதனை நோக்கி நான் .........


நானறிய
ஏதும் தீதை
எவருக்கும் செய்ததில்லை
ஏன் எனக்கும் மட்டும் இப்படி ...
வாழ்வின் நல்
பாதையை தீர்மானிக்க
நினைக்கையில்
போதை ஏறியது போல
காலம் ஏன் எனை
காலைவாரி
காட்டிடை எறியவேண்டும் ?
தூர விழுந்தேன்
துணிவாய் காலடி வைத்தேன்
அங்கும் முரடாய் எல்லாம்
பரவாயில்லை என நடக்க
அழுக்காய் போனதே
அவ்வழியும் ...
இருந்தும் தூரே தெரிந்த
வெளிச்சத்தின் கீற்றில்
புதிதாய் ஒரு தேசம்
நோக்கி நேரே வந்து
நெடுநாட்களாகிவிட்டன...
காலம் தூக்கி
எறிந்துவிட்டதென்னை
இளமைக்கால அனுபவத்தை
இனிதாய் நுகரவிடவில்லை ...
அன்பையும் அரவணைப்பையும்
தூரத்தே வைத்து
முரட்டுக்கரங்களுக்குள்
இறுக்கிப்பிடித்து நான்
உறும் வேதனையை
காலச்சாணக்கியன் வேடிக்கை
பார்க்க வைக்கிறான்
விகடமாய் பல்லிளிக்கிறான் ...

அன்பும் அதில் கலந்த அணைப்பும்
பெறுவதில் பாடாய் போய்விட்டது!
இதை பெறுவதே
எனக்குள் நான் உருவாக்கிய
சாதனைப்புத்தகத்தில் புகுத்த
நினைக்கும் சாதனை ...
அச்சாதனை நோக்கி நான் ...................

க.ஜயதீ(இலட்சியன்)