Wednesday, April 7, 2010

உனக்காய் ஓர் இருவரிகள் உரைக்காதிருந்தால் என் நா'வாய் இருக்காது...


வாழ்வில்
கரடு முரடுகள்
எங்கும் பரவி விரவி
மலிந்து கிடக்க
அதிலுலன்று பாடாய்
படும் வேதனை கண்டு
விரைந்து வருகிறாய் துணையாய் நீ - நம்பிக்கையே!!!

தேடித் தேடி
அலைகிறேன்
நிம்மதியை நாடி -நான்
வாடிவதங்கி நிற்கும் வேளைதனில்
ஓடி வருகிறாய் உற்ற தோழனாய் நீ
கோடி நன்றிகள் உனக்காய்
மேடாய் அடிக்கினும்
உந்தனக்கு ஈடாய் அமையாது
இவ்வுலகில் - நம்பிக்கைகே!!!

வெறுப்பாய் இருக்கும்
இருக்கவே இவ்வுலகில்
தொல்விகள் அவமானங்கள் கண்டு,
பொறுப்பா வாறேன்
நான் இருப்பாய் உன்னிடம்
இருக்கும் போது
ஏனப்பா வெறுப்பாய்
இருக்கிறாய் வாழ்வில்
என்று கேட்பாய் நீ - நம்பிக்கையே!!!

ஊரும் இல்லை
உறவும் இல்லை இங்கு
நீ மட்டும் என்றுமே என்னோடு
நம்பிக்கையே!!

உனக்காய் ஓர்
இருவரிகள்
உரைக்காதிருந்தால் என்
நா'வாய் இருக்காது
இருப்பாய் எனக்காய் என்று
விருப்பாய் இருக்க இவ்வாழ்வு என்றும் - நம்பிக்கையே!!!

4 comments:

Anonymous said...

cho nice frnd

க.இலட்சியன் said...

thanks frnd :)

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

'தேடித் தேடி அலைகிறேன்
நிம்மதியை நாடி -நான்
வாடிவதங்கி நிற்கும் வேளைதனில்
ஓடி வருகிறாய் உற்ற தோழனாய் நீ"

ரசித்தேன் இவ்வரிகளை...

க.இலட்சியன் said...

நன்றி தோழி பிரஷா :)