ஏன்
இவ்வளவு
தாமதம் ...
என்று கண்ணன் சொல்ல
இன்று
பஸ் கொஞ்சம்
லேட்டாகிவிட்டது
ராதா பதிலளித்தாள்
அன்புக்கோபம்
காட்டினான்
கண்ணனவன்
அவளும் பதிலுக்கு
கோபிக்காதடா
கண்ணா
என் செல்லம் எலா நீ
ஐஸ் வைக்காத
என்னை
காக்க வைத்து விட்டு
என்றான் இவன்.
அப்படி இப்படி
என்று
கோபம் இருவருக்கு
அன்பாய் மாற
அவள் முதலில்
மெல்ல முத்தம் இட்டாள் கன்னத்தில்
ஐயா விடுவாரா
பதிலுக்கு
ஊ ஊ ஊ
உதட்டை நீட்டி
உம்மா கொடுக்க போனார்
அந்த சமயம்
அம்மா இவருக்கு ரீ கொண்டுவர
அண்ணார்ந்து படுத்திருந்து
கனவில் காதலிக்கு
உம்மா கொடுக்கும் இவரைப்பார்த்து
அம்மாவுக்கு கடுப்பு வர
சுடு ரீ யை உதட்டில் தெளித்துவிட
தம்பி கண்ணனுக்கு கனவு தெளிந்து
ஆய் என்று கத்தினார்....
By.
K.Eலட்சியன்
No comments:
Post a Comment