முதல் பார்வையில்
கண்கள் வழி உள்வாங்கி - உன்
கன்னி முகம்
காணா இருள்
கவிந்து கிடக்கும் - என்
இதயத்தின் இருட்டில்
வடிவமைதி பெற்று
இருப்பாகியது
நீயும் யாரும்
அறியாது
பதிந்து விட்ட
அந்த முகத்தின்
முழு விதானத்தில்
முடங்கிப்போனது
முற்றுமாய் என்
எண்ணப்போக்குகள்
என் தலையில்
நானே ஏறி
நிற்க முடியுமா ?
என்னுள் ஆன உன்னை
தேடலுக்கு
அவசியம் கொடுத்து
தேடினால் கிட்டுமா
முயற்கொம்பில்
தேனெடுக்கும் முயற்சி
ஆகிவிட்டது
உனக்குள் நானானாலன்றி
எனக்குள் இருக்கும்
உனதான நினைவுகள்
உறங்கு கால
விதையாய் என்றும்
முளையாப் பயிராய்
வளராது
செழிக்காது
செல்லரித்துப்போய்விடுவது
விதியாகிவிடும்..............
No comments:
Post a Comment