Sunday, July 19, 2009

இலட்சியனின் கிறுக்கல்கள்: காதல்

இலட்சியனின் கிறுக்கல்கள்: காதல்

காதல்


ஓய்வில்லை

மலை முகட்டின்
உச்சியில் இருந்து
தடைகள் தாண்டி
வளைவு சுழிவுகள் என
கட்டுப்படுத் முடியாமல்
ஒடி வரும்
ஒரு அருவியாய்
நான்
எனக்காய் காத்திருக்கும்
கடலாய் நீ...

என்னை நான்
நினைத்தாலும்
கட்டுப்படுத்த முடியாது
உன்னை அடைந்த பின்னே
என்
பயணம் ஓயும்
அதுவரை ஓய்வில்லை எனக்கு!



கருவறை

மூடப்பட்ட
கதவின்
அறைக்குள்
முழுமையாய்
எல்லாம் கிடைத்தன
என்ன சுகம்
என்ன ஆனந்தம்

உணவும்
உணர்வும்
கிடைத்தன அங்கு

பகையும் இல்லை
பகை எதிர்ப்பும் இல்லை
அன்பும்
அரவணைப்பும்தான்
அங்கு கிடைத்தன

பாசத்தடவல்களும்
பரிமாற்ற
ஆழ்ந்த அன்பும்தான்
அங்கு கண்டேன்

வேசமும் இல்லை- நல்
வேடம் தாங்கிய
விஷக்கிரிமிகளும் அங்கில்லை....

ஐயிரெண்டு திங்கள்
அங்கிருந்து
பெற்ற சுகம்
ஐயாயிரம் திங்கள்
சென்றிடுனும்
திருப்பு வரா எமக்கு...

Saturday, July 18, 2009

அன்பு

உன்னுடல் பார்த்து
வருவதல்ல
அன்பு

உன்னுள்ள அழகை
உணர்ந்து வருவதே
அன்பு

பார்க்கும்போது
மட்டும்
பரிமாறிக்கொள்வதல்ல
அன்பு

எங்கிருந்தாலும்
பார்க்க துடிக்கும்
இயல்பே
அன்பு

தூர இருந்தும்
மனசார
உனக்காய்
வேண்டிக்கொள்வதே
அன்பு....





மரணம்

நாம் இருக்கும்
போது
வரத்துணிவற்ற
கோழை
மரணம்....

போன பின்பு
வந்து
கும்மாளமிடும்
வாயாடி மட்டுமே நீ...

நெஞ்சில் துணிவிருந்தால்
நேருக்கு நேரே
வந்து பார்...


Thursday, July 16, 2009

அஞ்சோம்

உன்னோடு நானும்
என்னோடு நீயும்
சேரும் நாட்களுக்கு
காத்திருக்க
வேண்டியதில்லை॥

செந்நிற அழகை
அந்த நிலத்தில்
பெய்யப்பட்ட மழை நீர்
பெற்று கலந்து விடுவது
போல உன் உள்ளமும்
என் உள்ளமும்
இரண்டற கலந்து
விட்டென॥

இனி நம்மை
பிரிக்க முடியாது
சில வேளை
விதி பிரித்தால்
அந்த விதியையும்
வெல்ல
உலகத்தை விட்டுப்
பிரியவும் அஞ்சோம்॥

மரணத்தையும் வெல்வோம்

உன் மனதையும்
என் மனதையும்
இறுக கட்டிவிட்டான்
இறைவன் ...

பின்னிப்பிணைந்து விட்டன
என் இதயமும்
உன் இதயமும்॥

இனி அந்த
கடவுளே
நினைத்தாலும்
எமை
பிரிக்க முடியாது॥

மரணம் எமை
தன் தழுவிக்கொண்டாலும்
அந்த மரணத்தையும்
வெல்வோம்....

Wednesday, July 15, 2009

ஓரக்கண்ணால்

உன் கண்
அழகில் என்
கண்கள்

மயங்கிவிட்டதடி...


ஓரக்கண்ணால்
மட்டும் உன்னை
பார்க்கிறேன்
முழுமையாய்
உன்னை பார்த்தால்
உன்னை
தொடர்ந்து பார்க்கும்
சக்தி அற்றதாகிடும்
என்பதால்...

Tuesday, July 14, 2009

நான் பேயனாகி

நான் ஒரு
கிரகத்திலும்
நீ ஒரு
கிரகத்திலும்
இருந்தென்ன
லாபம்!


கற்பனைக்
கனவில் மட்டும்
காட்சி தர
வானத்து நிலவுக்கு
அழைக்கிறாய்
கனவு முடிந்ததும்
தூரத்தே தூக்கியெறியப்படுகிறேன்


வெவ்வேறு இட
வாழ்வு வேண்டாம்
என்னை நீ அழை அல்லது
என்னோடு நீயும்
வந்துவிடு...

கனவில் மட்டும்
நீ வருகிறாய் அது
கலைந்ததும்
நான் பேயனாகி
உன்னை தேடி
அலைகிறேன்..

வண்டாக

பூவோ! அல்லது
பூவினுள் உள்ள
பூந்தேனோ?

எதுவாக நீஇருப்பினும்
உன்னை தினம்
நாடி வரும்
வண்டாக
நான் இருப்பேன்॥

Monday, July 13, 2009

நட்பும் காதலும்

ஆபத்தில்தன்
உயிர் கொடுத்து
நண்பனை
காத்திடுவது
நட்பு...

அன்புக்குரியவரின்
அழிவு கண்டு
மனம் ஆற்றாது
தானும்அழிந்து
போவது
காதல்...

Sunday, July 12, 2009

வைரமுத்து இங்குற்ற இந்நாள்

தமிழ்த்தாய் வயிற்றுதித்து
மலர்ந்த
கவிப்பூங்கா
ஒன்று புது
அகவை
காணுகிறது...

வைரமே வைரமே
நீ ஒன்றும் முன்பு
பெரிய மதிப்புடையோன்
அல்ல! எங்கள்
அண்ணல் பெருங்கவி
இங்குதித்த இந்நாளே
உன்பெயர் உலகறிந்தது...

முத்துவே முத்துவே
ஆழ்கடலில் நீ
வந்திட்டதால்
உனக்கு அந்தஸ்து
வந்ததென்று
எண்ணாதே!
எங்கள் தமிழவள்
ஈன்ற ஈடுணையற்ற
வைரமுத்து இந்நாள்
இங்குற்றதால்
உனக்கு வந்தது
புகழ்...

அமுதத்தினும் இனிய
தமிழ்தந்த
கறுப்பு வைரம்
புதுவகவை புகுகிறது
புதுவகவையே!
இனித்தான் உனக்கு
புகழ்...

வாழ்க வாழ்க
பெருங்கவி
பேரரசு வாழ்க
பெருமைபெற்ற
தமிழே எங்கள்
கவிப்பேரரசால்
வாழ்க...

மேகம்

உதவாமல் இருக்கின்ற
ஒன்றை தெரியாமலே
திருடி..
உதவுகின்ற வகையில்
சீரமைத்து எல்லோரும்

எல்லாம் மகிழ
தெரியக்கொடுக்கின்ற,
சொல்லாமல்
நன்மை பயக்கும்
பெருந்தகை....

சேர்த்து விடு

காற்றே உனக்கு
ஏன்
ஓர நீதி...


ஒரு பூவின்
மகரந்தத்தை
எடுத்து சென்று
இன்னொரு பூவின்
மகரந்தத்துடன்
சேர்த்து
சித்து விளையாட்டு
செய்து
ஏதேதோ உதவுகிறாய்...

எனக்கும் அவளுக்கும்
இடைவெளி
தொடர்கிறது
ஏதாவது
சித்து செய்து
சேர்த்து விடு
என்னோடு அவளை

பருவப்பார்வை

பருவ
மழைக்காககாத்திருக்கும்
பயிர்கள்போல்...

எனக்குள் தோன்றிய
உன் மீதான
காதல் செடியானது -உன்
பருவப்பார்வைக்காக காத்திருக்கின்றது...

Sunday, April 12, 2009

காதல் வாழ்க

விண்மீன்கள் ஒவ்வொன்றும் கண் சிமிட்டின,
வெட்கத்தில் நிலா.... ,
வெண் மேகம் தன்னாடை கொண்டு போர்த்திக் கொண்டது...
கற்பைக் காப்பற்றிய நீயே என் காதல் என்றது நிலா
மேகம் ஆனந்த கண்ணீரைச் சொரிந்தது....
அது பூமிக்கு மழைாக
பூமியும் பூக்களால் கவிமாலை சொரிந்தது...
நிலாமேகக் காதல் வாழ்க என்று
என் கனவு கலைந்தது

Wednesday, April 1, 2009

றோசா அருகே முள்

பிரம்மன் யார்த்த
அழகு ஓவியம்தான்
நீ

ஆனால் நீ
என்னை வெறுக்க
வார்த்தைகளால்
காயப்படுத்தியபோதுதான்
றோசாவின் அருகே
ஏன் முள்ளை
வைத்தான் என்ற
காரணம் புரிந்தது......

Tuesday, January 20, 2009

ஆசை கொள்

ஒரு பொருளை
நோக்க நேரிடலாம்
அது உங்களுக்கு
அழகாகவும் இருக்கலாம்
இல்லாமலும் இருக்கும்
அதன் தரத்தை
மதிப்பிட அருகதையுள்ளது
ஆனால் அழகாக இருந்தால்
அது தனக்கே
சொந்தமாக வேண்டும்
என்ற நினைப்பு
தவறானது
நிலவு எல்லோருக்கும்
அழகாக இருக்கின்றது
ஆனால் உன்னருகில்
இருக்க வேண்டும்
என்று நினைப்பது
எவ்வளவு மடத்தனமானது
அவ்வழகை உன்னால்
ரசிக்க மட்டுமே
முடியும் ருசிக்க முடியாது
அது போன்று
எத்தனை
அழகு மிகுந்ததாக
இருந்தாலும் ஒன்றை
நாம் ரசித்துக்கொண்டு
இருக்கலாம் ஆனால்
அது எமக்கு
சொந்தமாக வேண்டும்
என்பது
தகுதிக்கு அப்பாற்பட்டதாகவும்
இருக்கலாம்
அழகின் தரத்தை
அறிந்து ஆசைகொள்!

Sunday, January 4, 2009

(மா) மரம்

நான் ஒரு
மா மரம்
என் இளமையில்
நான் பட்ட
சில கஸ்டங்களை
சொல்கின்றேன்...

உண்ண உணவின்றி
உறிஞ்ச நீரின்றி
வெந்தணல்
வெப்பத்தில்
அவியாய் அவிந்து
நொந்து வெந்து
நூலாகி சுருங்கி
உக்கி நின்றேன்...

பார்ப்பார் எவரும்
இன்றி இன்னலே
வாழ்வாகி வாடி
வதங்கி வடிவிழந்து
கூனிக்குறுகி
நின்றேன்...

என்முன்னே
நிற்கும்
மற்றவர்களுக்கு
எல்லாம் கிடைத்தன
என்தாயும் என்ன
செய்வாள்
அவளும் சோர்வுற்று
போனாள்
ஏனெனில் நாம்
காய்க்காத
பலனின்றிய
மரங்களானதால்
பார்ப்போர்
எவரும் இல்லை
நிழலுக்கும் என்னருகே
ஒதுங்க எவரும்
வரவில்லை
ஏன் என்று
உங்களுக்கு புரியும்
இலைகள்தான்
என்னில் இல்லையே...

வேதனையையும் சோதனையையும்
நினைத்து வெந்தேன்
இருந்தும் என்
மனவுறுதி தளரவில்லை
என்றொரு ஒருநாள்
நாம் வெற்றி
வாகை சூடலாம்
என்ற நம்பிக்கையுடன்
இருந்தேன்...

இறைவன் கருணையால்
சின்ன மழை
ஒன்று பெய்தது
அதனை எனக்கான
வாய்ப்பாய் எண்ணி
விடாமுயற்சியுடன்
அதனை வைத்தே
எனக்கு உருக்கொடுக்கலானேன்
நம்பிக்கை வீண்போகவில்லை
சிறுதுளீர் பெருதுளீர்
என இலைகளை
படைத்தேன்
இம்சற்று நாட்களில்
பச்சைப்பசேல் என்று
உருவெடுத்தேன்
மெல்ல மெல்ல
காய்க்கவும் தொடங்கினேன்
தொடர்ந்து எடுத்த முயற்சியால்
காய் பழம்
என என்னை
மறைத்து பொலிவாய்
மிளிர்கின்றேன்....

எனக்கு இப்போது
தேவைகள் ஒன்றும்
இல்லை
எதிர்பார்த்த நேரம்
தேவைகளின்
அவசியப்பாடு இருந்தன

ஆனால்....
என்னை பராமரிக்க
ஓடி ஓடி
வருகின்றார்கள்
இந்த மனிதர்கள்
நிழலுக்காக என்னருகே
ஒதுங்கி ஏதோ
ஏதோ வம்பு
வாய்ச்சண்டைகள்
புரிகின்றார்கள்
மாறி மாறி
கவனிக்கின்றார்கள்...

என்னால் தனித்து
இயங்க முடியும்
சுயலாபத்திற்காக
நான் வேண்டாத
உதவிகள் அனைத்தையம்
செய்கின்றார்கள்
எல்லாம் என்னில்
இருந்து பெறுகின்ற
நன்மைக்கான
பாசாங்கு
நாடகம்தானே
குறைவான அறிவு
கொண்ட எனக்கே
இவ்வளவு புரிகின்றது
என்றால்...
ஆறறிவு கொண்ட
இம்மனிதர்களுக்கு
எவ்வளவு புரியும்...

பலன்கருதி
சேவை செய்யும்
மானிடப்பயல்களை
ஏன் படைத்தான்
இறைவன்...

இவர்களிடம் நாம்
கற்றுக்கொள்ள வேண்டியது
என்ன இருக்கின்றது
வஞ்சகம்தான்...