Tuesday, July 14, 2009

நான் பேயனாகி

நான் ஒரு
கிரகத்திலும்
நீ ஒரு
கிரகத்திலும்
இருந்தென்ன
லாபம்!


கற்பனைக்
கனவில் மட்டும்
காட்சி தர
வானத்து நிலவுக்கு
அழைக்கிறாய்
கனவு முடிந்ததும்
தூரத்தே தூக்கியெறியப்படுகிறேன்


வெவ்வேறு இட
வாழ்வு வேண்டாம்
என்னை நீ அழை அல்லது
என்னோடு நீயும்
வந்துவிடு...

கனவில் மட்டும்
நீ வருகிறாய் அது
கலைந்ததும்
நான் பேயனாகி
உன்னை தேடி
அலைகிறேன்..

வண்டாக

பூவோ! அல்லது
பூவினுள் உள்ள
பூந்தேனோ?

எதுவாக நீஇருப்பினும்
உன்னை தினம்
நாடி வரும்
வண்டாக
நான் இருப்பேன்॥

Monday, July 13, 2009

நட்பும் காதலும்

ஆபத்தில்தன்
உயிர் கொடுத்து
நண்பனை
காத்திடுவது
நட்பு...

அன்புக்குரியவரின்
அழிவு கண்டு
மனம் ஆற்றாது
தானும்அழிந்து
போவது
காதல்...

Sunday, July 12, 2009

வைரமுத்து இங்குற்ற இந்நாள்

தமிழ்த்தாய் வயிற்றுதித்து
மலர்ந்த
கவிப்பூங்கா
ஒன்று புது
அகவை
காணுகிறது...

வைரமே வைரமே
நீ ஒன்றும் முன்பு
பெரிய மதிப்புடையோன்
அல்ல! எங்கள்
அண்ணல் பெருங்கவி
இங்குதித்த இந்நாளே
உன்பெயர் உலகறிந்தது...

முத்துவே முத்துவே
ஆழ்கடலில் நீ
வந்திட்டதால்
உனக்கு அந்தஸ்து
வந்ததென்று
எண்ணாதே!
எங்கள் தமிழவள்
ஈன்ற ஈடுணையற்ற
வைரமுத்து இந்நாள்
இங்குற்றதால்
உனக்கு வந்தது
புகழ்...

அமுதத்தினும் இனிய
தமிழ்தந்த
கறுப்பு வைரம்
புதுவகவை புகுகிறது
புதுவகவையே!
இனித்தான் உனக்கு
புகழ்...

வாழ்க வாழ்க
பெருங்கவி
பேரரசு வாழ்க
பெருமைபெற்ற
தமிழே எங்கள்
கவிப்பேரரசால்
வாழ்க...

மேகம்

உதவாமல் இருக்கின்ற
ஒன்றை தெரியாமலே
திருடி..
உதவுகின்ற வகையில்
சீரமைத்து எல்லோரும்

எல்லாம் மகிழ
தெரியக்கொடுக்கின்ற,
சொல்லாமல்
நன்மை பயக்கும்
பெருந்தகை....

சேர்த்து விடு

காற்றே உனக்கு
ஏன்
ஓர நீதி...


ஒரு பூவின்
மகரந்தத்தை
எடுத்து சென்று
இன்னொரு பூவின்
மகரந்தத்துடன்
சேர்த்து
சித்து விளையாட்டு
செய்து
ஏதேதோ உதவுகிறாய்...

எனக்கும் அவளுக்கும்
இடைவெளி
தொடர்கிறது
ஏதாவது
சித்து செய்து
சேர்த்து விடு
என்னோடு அவளை

பருவப்பார்வை

பருவ
மழைக்காககாத்திருக்கும்
பயிர்கள்போல்...

எனக்குள் தோன்றிய
உன் மீதான
காதல் செடியானது -உன்
பருவப்பார்வைக்காக காத்திருக்கின்றது...

Sunday, April 12, 2009

காதல் வாழ்க

விண்மீன்கள் ஒவ்வொன்றும் கண் சிமிட்டின,
வெட்கத்தில் நிலா.... ,
வெண் மேகம் தன்னாடை கொண்டு போர்த்திக் கொண்டது...
கற்பைக் காப்பற்றிய நீயே என் காதல் என்றது நிலா
மேகம் ஆனந்த கண்ணீரைச் சொரிந்தது....
அது பூமிக்கு மழைாக
பூமியும் பூக்களால் கவிமாலை சொரிந்தது...
நிலாமேகக் காதல் வாழ்க என்று
என் கனவு கலைந்தது

Wednesday, April 1, 2009

றோசா அருகே முள்

பிரம்மன் யார்த்த
அழகு ஓவியம்தான்
நீ

ஆனால் நீ
என்னை வெறுக்க
வார்த்தைகளால்
காயப்படுத்தியபோதுதான்
றோசாவின் அருகே
ஏன் முள்ளை
வைத்தான் என்ற
காரணம் புரிந்தது......

Tuesday, January 20, 2009

ஆசை கொள்

ஒரு பொருளை
நோக்க நேரிடலாம்
அது உங்களுக்கு
அழகாகவும் இருக்கலாம்
இல்லாமலும் இருக்கும்
அதன் தரத்தை
மதிப்பிட அருகதையுள்ளது
ஆனால் அழகாக இருந்தால்
அது தனக்கே
சொந்தமாக வேண்டும்
என்ற நினைப்பு
தவறானது
நிலவு எல்லோருக்கும்
அழகாக இருக்கின்றது
ஆனால் உன்னருகில்
இருக்க வேண்டும்
என்று நினைப்பது
எவ்வளவு மடத்தனமானது
அவ்வழகை உன்னால்
ரசிக்க மட்டுமே
முடியும் ருசிக்க முடியாது
அது போன்று
எத்தனை
அழகு மிகுந்ததாக
இருந்தாலும் ஒன்றை
நாம் ரசித்துக்கொண்டு
இருக்கலாம் ஆனால்
அது எமக்கு
சொந்தமாக வேண்டும்
என்பது
தகுதிக்கு அப்பாற்பட்டதாகவும்
இருக்கலாம்
அழகின் தரத்தை
அறிந்து ஆசைகொள்!

Sunday, January 4, 2009

(மா) மரம்

நான் ஒரு
மா மரம்
என் இளமையில்
நான் பட்ட
சில கஸ்டங்களை
சொல்கின்றேன்...

உண்ண உணவின்றி
உறிஞ்ச நீரின்றி
வெந்தணல்
வெப்பத்தில்
அவியாய் அவிந்து
நொந்து வெந்து
நூலாகி சுருங்கி
உக்கி நின்றேன்...

பார்ப்பார் எவரும்
இன்றி இன்னலே
வாழ்வாகி வாடி
வதங்கி வடிவிழந்து
கூனிக்குறுகி
நின்றேன்...

என்முன்னே
நிற்கும்
மற்றவர்களுக்கு
எல்லாம் கிடைத்தன
என்தாயும் என்ன
செய்வாள்
அவளும் சோர்வுற்று
போனாள்
ஏனெனில் நாம்
காய்க்காத
பலனின்றிய
மரங்களானதால்
பார்ப்போர்
எவரும் இல்லை
நிழலுக்கும் என்னருகே
ஒதுங்க எவரும்
வரவில்லை
ஏன் என்று
உங்களுக்கு புரியும்
இலைகள்தான்
என்னில் இல்லையே...

வேதனையையும் சோதனையையும்
நினைத்து வெந்தேன்
இருந்தும் என்
மனவுறுதி தளரவில்லை
என்றொரு ஒருநாள்
நாம் வெற்றி
வாகை சூடலாம்
என்ற நம்பிக்கையுடன்
இருந்தேன்...

இறைவன் கருணையால்
சின்ன மழை
ஒன்று பெய்தது
அதனை எனக்கான
வாய்ப்பாய் எண்ணி
விடாமுயற்சியுடன்
அதனை வைத்தே
எனக்கு உருக்கொடுக்கலானேன்
நம்பிக்கை வீண்போகவில்லை
சிறுதுளீர் பெருதுளீர்
என இலைகளை
படைத்தேன்
இம்சற்று நாட்களில்
பச்சைப்பசேல் என்று
உருவெடுத்தேன்
மெல்ல மெல்ல
காய்க்கவும் தொடங்கினேன்
தொடர்ந்து எடுத்த முயற்சியால்
காய் பழம்
என என்னை
மறைத்து பொலிவாய்
மிளிர்கின்றேன்....

எனக்கு இப்போது
தேவைகள் ஒன்றும்
இல்லை
எதிர்பார்த்த நேரம்
தேவைகளின்
அவசியப்பாடு இருந்தன

ஆனால்....
என்னை பராமரிக்க
ஓடி ஓடி
வருகின்றார்கள்
இந்த மனிதர்கள்
நிழலுக்காக என்னருகே
ஒதுங்கி ஏதோ
ஏதோ வம்பு
வாய்ச்சண்டைகள்
புரிகின்றார்கள்
மாறி மாறி
கவனிக்கின்றார்கள்...

என்னால் தனித்து
இயங்க முடியும்
சுயலாபத்திற்காக
நான் வேண்டாத
உதவிகள் அனைத்தையம்
செய்கின்றார்கள்
எல்லாம் என்னில்
இருந்து பெறுகின்ற
நன்மைக்கான
பாசாங்கு
நாடகம்தானே
குறைவான அறிவு
கொண்ட எனக்கே
இவ்வளவு புரிகின்றது
என்றால்...
ஆறறிவு கொண்ட
இம்மனிதர்களுக்கு
எவ்வளவு புரியும்...

பலன்கருதி
சேவை செய்யும்
மானிடப்பயல்களை
ஏன் படைத்தான்
இறைவன்...

இவர்களிடம் நாம்
கற்றுக்கொள்ள வேண்டியது
என்ன இருக்கின்றது
வஞ்சகம்தான்...

Tuesday, December 16, 2008

தெவிட்டாத தேன்

உன் மீது
எனக்குள் எழுந்த
காதலால்
உன் ஒவ்வொரு
அசைவிற்கும்
அர்த்தம் சொல்ல
முற்பட்டு
கலைச்சொற்கள்
தேடித்தேடி
தமிழுள் மூழ்கினேன்
முடிவில்
உன்னை விட
பேரழகி என்
இனிய தமிழேயென
தமிழவளை
காதலிக்கின்றேன்
என் உயிர்
பிரிந்து உடல்
சிதைந்தாலும்
இவள் மீது
கொண்ட காதல்
தெவிட்டாத
தேனாக என்றும்
இருக்கும்...

Monday, December 15, 2008

தூது செல்வாயா?

உனைக் கண்ட
முதல் நாள்
முகம்பார்த்தேன்
நீ எனைப்பார்த்தாய்

மறுநாள் கண்
சிமிட்டினேன்
நீயும் சிமிட்டினாய்

இன்னொரு நாள்
என் புன்முறுவலுக்கு
பதிலுக்கு நீயும்
முறுவல் தந்தாய்

ஹாய் சொல்ல
ஹாய்
நலமா?
என்றாய்
நலமே என்று
நகர்ந்தேன்
இவ்வாறு
நாட்கள் சில
நகர...

நானும் மடையன்
நீ காதலிப்பதாக
எண்ணி
ஒரு நாள்
உன்னிடம்
காதல் சொல்ல
மெல்ல உன்னருகே
வந்தேன்
நீயும் என்னருகே
வந்தாய்...

வாய்திறக்க முன்பு
தூது செல்வாயா
உன் நண்பனிடம்
எனக்காக...
காதலிப்பதாக
சொல் என்றாய்...
ஆமென்று தலையசைத்தேன்
என்னாசை
சொல்லாமலே
சென்றது
என்னிடம்...

துரதிஸ்டம்

பூக்களின் ஸ்பரிசம்
தொட்டதால்
தென்றலில்
நறுமணம்
கமழ்ந்தது

நீ என்
ஸ்பரிசம்
தொட்டதால்
இப்பிறப்பின் பேறு
பெற்றேன்
என்றுணர்ந்தேன்

சற்று விலகி
நீயும்
"குட் பாய்"
சொன்னாய்
இப்பிறப்பே
துரதிஸ்டம்
என்று உணர்கிறேன்...

Sunday, December 14, 2008

இன்னும் காதலிப்பதால்

காதலி என்றாய்
காதலித்தேன்
வா என்றாய்
வந்தேன்
போ என்றாய்
போனேன்
நில் என்றாய்
நின்றேன்
நிறுத்து என்றாய்
நிறுத்தினேன்
பாடு என்றாய்
பாடினேன்
ஆடுடா என்றாய்
ஆடினேன்
இவ்வாறு
நீ இட்ட
கட்டளையை
சிரம் தாழ்த்தி
நிறைவேற்றினேன்
எல்லாம் உன்னை
நேசிப்பதால்
கடைசியில் ஒன்று
சொன்னாய்
இனிமேல்
என்னை மறந்திடு
என்று
அதையும் செய்து
நிற்கிறேன்

ஏனெனில் இன்னும்
உன்னை காதலிப்பதால்

ஏற்க மறுத்ததால்



கண்கள் தூங்க
மறுத்தன
வாய் உண்ண
மறுத்தது
உதடுகள் அசை
மறுத்தன
கால்கள் நடக்க
மறுத்தன......
உள்ளமும்
உடலும்
உணர்வற்ற
நிலையில்
உயிர் ஊசலாடுகின்றது

இவ்வளவும் நீ
என் காதலை
ஏற்க மறுத்ததால்
வந்த வினை...

கைவிட்ட நாளிலிருந்து

கோடையின் வெப்பத்தால்
வரட்சியின் தாண்டவம்
ஆனால்
நான் மட்டும்
நீ என்னை
காதலித்து
கைவிட்ட நாளிலிருந்து
ஒவ்வோரு நிமிடமும்
கண்ணீரின்
தண்ணீரில்
மிதக்கின்றேன்
உடல் குளிர்கிறது
உள்ளமோ வெப்பத்தில்
வெதும்புகிறது!

Saturday, November 29, 2008

கங்கை

நுதல் விழி
நாட்டத்து
இறையோன்
தலை மீது
பிறையுடன்
அமர்ந்துறைந்து
அருளோங்கும்
தேவியே! - உன்
புகழை
பறை சாற்ற
அறை கூவி
அழைப்பேன்
மழையென
கவிமழை
பொழிய
அருள்வாய்
எஞ்ஞான்றும்...
புவி மீது
புகழடைந்து
விண் மீது
உன் அடி
பணியவே!!!

புராணங்கள் எல்லாம்
உன் கதை
சொல்லும்
மேவிய மேதை
யாவரும்
கூவியே உன்தன்
புகழ் தனை
காவியமாக்கி
சாதனை செய்வர்!!!

பகிரத மாமன்னன்
புவியாண்ட
போது
அவனுருகி
சிவனை நினைந்து
ஆழ்
தவமிருந்து
பெற்ற பேறே
விண்ணிருந்து _ நாம்
உமைப்பெற்ற
வழியென
முன்னோர்
ஜதிகம் சொல்லும்
தாயே!!!

புவி வாழும்
உயிர் யாவும்
அவை வாழ
உனை இன்றி
அமையும்
அணுவும் இருக்காது
என் நீர்த்தாயே

எத்தனை உலகம்
அத்தனை எங்கும்
நீ இன்றி
அணுவும் அசையாது


பிறப்பிறப்பெல்லாம்
உன்னாலே...
இருந்தவர்
பின்
இறந்தும் - அவர்
சிறப்பை இன்னும்
இருப்பவர்
பெசுவர்...
அவர்தம் இருப்பு
நிலையாக
நாதமாய்
இருப்பதும்
நீயே!

குடிக்க தண்ணீர்
பின் பசிக்கும்
தின்ன சோறு
அதை
அவிக்க வென்னீர்
.... வேண்டும் அரிசி...ம்
உருவாக்க நெல்லு
போவேன் செய்ய
பயிரு
பாச்ச
வேண்டும்
நீரு
அப்போ
எல்லாமே
நீதானே தாயே!!!




Wednesday, November 26, 2008

ஞாயிறின் ஞாயிறே

கண்மலர்ந்து நீயும்
விண்ணுயுயர உயர
மண்ணிலுளோர்
(இடு)கண் அ(யர)ற
வெடுக்கன வருவாய்
(நடு) நன் நாயகனாய்
தொடுவானில் மிடுக்குடன்
ஞாயிறின் ஞாயிறே...

இரவின் புறப்பாடு

இரவிரவாய்
அலைமோதும் மனதின்
திறானாய்வுக்காக
காலையின் புறப்பாடு...

அளவற்ற அன்பின்
ஆழ்மன வெளிப்பாடாய்
நட்பின் பரிபாசையாய்
மெளன மொழிகளின்
பரிமாற்றங்கள்
பனி்ச்சாரலாக
உணர்வொடு உதிரும்
வார்த்தைகளாக
காலை மாலை
மதிய வணக்கங்கள்