எனக்காக வாழ்வேன்
என்றுரைத்தாய்
உனக்காக வாழ்வேன்!
பதிலுக்கு நானும்
சொன்னேன்...
இடையில் சில
நாட்கள் நகர
இன்னொருத்தனுடன்
நீ வாழ்கிறாய்...
எனக்காகவா
இன்னொருத்தனுடன்
வாழ்கிறாய்??
உன் வார்த்தைகள்
பொய்யானது.
என்வார்த்தைகள்
இன்றும் உண்மையாய்..
உனக்காக வாழ்வேன்
என்றுதான் சொன்னேன்
உனக்காக மட்டுமல்ல...
அவ்வாறெனின்
சோகத்தால் வாடி
முகமெல்லாம் தாடி...
ஈற்றில் என்னை
பெட்டியை மூடி
புதைத்திருப்பர்
பலர் கூடி...
நான் புத்துணர்வுடன்
இன்னும் எனக்காய்
என் பெற்றோருக்காய்
உறவினருக்காய்
வாழ்கிறேன்
வாழ்வேன்...
ஆனால்
இன்றும் என்
வார்த்தைகள்
பொய்யாது
போகின்றன...
Saturday, July 25, 2009
Friday, July 24, 2009
ஒவ்வொன்றினும் உன் நினைவுகள் தொடர
என் முகம்
பார்க்க சென்று
கண்ணாடி அங்கே
முன்னாடி நின்றேன்...
எப்பவோ பார்த்த
உன் உருவம்
என் விழியின்
கருவளையத்தில்
சாய்வாய் காட்சி
தருகிறதடி...
இமைக்கவும்
பயப்படுகிறேன்
உன்மீது என்
என்இமைகள் பட்டு
விடக்கூடாதென்பதற்காக...
பூங்காவனம்
அங்கு மெல்லென
தென்றலின் தாலாட்டில்
ஆடிடும் பூக்கள்
ஒவ்வொன்றின் நடுவே
ஒளியாய் காட்சி
தர...
பூப்பறிக்க
என் கரங்கள் மறுக்குதடி...
ஒவ்வொன்றினும்
உன் நினைவுகள்
தொடர...
செயலற்றுப்போகிறேன்..
பார்க்க சென்று
கண்ணாடி அங்கே
முன்னாடி நின்றேன்...
எப்பவோ பார்த்த
உன் உருவம்
என் விழியின்
கருவளையத்தில்
சாய்வாய் காட்சி
தருகிறதடி...
இமைக்கவும்
பயப்படுகிறேன்
உன்மீது என்
என்இமைகள் பட்டு
விடக்கூடாதென்பதற்காக...
பூங்காவனம்
அங்கு மெல்லென
தென்றலின் தாலாட்டில்
ஆடிடும் பூக்கள்
ஒவ்வொன்றின் நடுவே
ஒளியாய் காட்சி
தர...
பூப்பறிக்க
என் கரங்கள் மறுக்குதடி...
ஒவ்வொன்றினும்
உன் நினைவுகள்
தொடர...
செயலற்றுப்போகிறேன்..
எனினும் உன்னை எனக்கு பிரியமாய் பிடித்திருக்கிறது "பிரிவே"
பிரிவே நீ
ஒரு சிறைச்சாலை
உள்ளத்தால்
ஒன்றுபட்ட
இதயங்களை
இணைய விடாமல்
நாட்கணக்கில்
தனித்தனியே
சிறையில்
பூட்டி வைத்து
ஈற்றில்
ஈவிரக்கமின்றி
கொன்று தீர்க்க
வழிசெய்யும்
நரகச்சாலை...
எனினும் உன்னை
எனக்கு பிரியமாய்
பிடித்திருக்கிறது
"பிரிவே"
பரஸ்பர
அன்பின்
ஆழத்தை
அறிவித்து
அதை இன்னும்
கூர்மையடையச் செய்யும்
சக்தி உனக்கு
மட்டும்தான் உண்டு
அதனால் உன்னை
எனக்கும் பிடிக்கிறது.....
ஒரு சிறைச்சாலை
உள்ளத்தால்
ஒன்றுபட்ட
இதயங்களை
இணைய விடாமல்
நாட்கணக்கில்
தனித்தனியே
சிறையில்
பூட்டி வைத்து
ஈற்றில்
ஈவிரக்கமின்றி
கொன்று தீர்க்க
வழிசெய்யும்
நரகச்சாலை...
எனினும் உன்னை
எனக்கு பிரியமாய்
பிடித்திருக்கிறது
"பிரிவே"
பரஸ்பர
அன்பின்
ஆழத்தை
அறிவித்து
அதை இன்னும்
கூர்மையடையச் செய்யும்
சக்தி உனக்கு
மட்டும்தான் உண்டு
அதனால் உன்னை
எனக்கும் பிடிக்கிறது.....
விட்டுச்சென்ற காதலும், நிழலாய் தொடரும் நினைவுகளும்.
உருக்கும் வெயிலும்
ஒரு இதமான
குளீர் காலத்தின்
சுகந்தத்தை
அளிக்கிறது...
உடலை
உறைய வைக்கும்
பனியின் தாக்கமும்
வெதுவெதுப்பான
வெம்மை தந்து
சுகமாய் இருக்கிறது...
எல்லாம் நீ
பிரிந்து சென்றபோது
கூறிய வார்த்தைகளும்
விட்டுச்சென்ற காதலும்
நிழலாய் தொடரும்
சுகமான நினைவுகள்
தருகின்ற...
காலநிலை
தற்ப வெப்ப மாற்றங்கள்தான்...
ஒரு இதமான
குளீர் காலத்தின்
சுகந்தத்தை
அளிக்கிறது...
உடலை
உறைய வைக்கும்
பனியின் தாக்கமும்
வெதுவெதுப்பான
வெம்மை தந்து
சுகமாய் இருக்கிறது...
எல்லாம் நீ
பிரிந்து சென்றபோது
கூறிய வார்த்தைகளும்
விட்டுச்சென்ற காதலும்
நிழலாய் தொடரும்
சுகமான நினைவுகள்
தருகின்ற...
காலநிலை
தற்ப வெப்ப மாற்றங்கள்தான்...
Monday, July 20, 2009
அழகு
வண்ணக்கலையழகு
வானவில்லின் நிறமழகு
வடித்த சிலையழகு
வான் அங்கே நிலாவழகு
வாய்விரிக்க பல்லழகு
வாரணமாயிரம் அழகு
வந்தால் முன்னழகு
வழிவிட்டால் பின்னழகு
வாய்த்த இதழழகு
வா வா நீ
வந்தபின்னும் நீ அழகு
வரப்போகும் மாமியார் வடிவழகு
வாய்த்த என் நண்பர் எல்லாம் நல்லழகு!
வானவில்லின் நிறமழகு
வடித்த சிலையழகு
வான் அங்கே நிலாவழகு
வாய்விரிக்க பல்லழகு
வாரணமாயிரம் அழகு
வந்தால் முன்னழகு
வழிவிட்டால் பின்னழகு
வாய்த்த இதழழகு
வா வா நீ
வந்தபின்னும் நீ அழகு
வரப்போகும் மாமியார் வடிவழகு
வாய்த்த என் நண்பர் எல்லாம் நல்லழகு!
ராஜ மகன் நீ அன்றோ

ஊரார் மலடி என
கூடியிருந்து
குற்றம் சொல்லாமல்
ஓடி வந்து என்வயிற்றுதித்த
ராஜ மகவே
வாடா உனக்கொரு
ஆசை முத்தம்
தாறேன்...
தேசம் எல்லாம்
சுற்றி வேண்டாத
சாமியில்ல
நாள் இழுத்து நாவிழுத்து
வேண்டிய வேண்டலுக்கு
வேந்தன் என வந்த
வெற்றித்திலகமடா நீ
எனக்கு...
ஊர்முழுக்க உறவிருந்தும்
ஒட்டி உறவாட
பாசம் இருந்தும்
நான் இருந்தேன் தனியாய்
நீ வந்தாய் என் துணையாய்
இனிய மகனே...
பத்து மாதம்
உனைச்சுமக்க
பட்ட வேதனை
பெரிதன்று உனை
பார்த்துப்பார்த்து
நான் மகிழ
பார்வந்த என்
பார் வேந்தன் நீ
அன்றோ...
எனக்கினி என
ஒன்றும் வேண்டேன்
எனக்கொரு தாய்
என்ற அந்தஸ்து
தந்த உன்னை
ஊட்டி வளர்க்க
ஒருபடி ஆயுள்
வேண்டி நிற்பேன்
என் மகனே!
Sunday, July 19, 2009
நட்பு
கொல்லும் காதல்
ஓய்வில்லை
மலை முகட்டின்
உச்சியில் இருந்து
தடைகள் தாண்டி
வளைவு சுழிவுகள் என
கட்டுப்படுத் முடியாமல்
ஒடி வரும்
ஒரு அருவியாய்
நான்
எனக்காய் காத்திருக்கும்
கடலாய் நீ...
என்னை நான்
நினைத்தாலும்
கட்டுப்படுத்த முடியாது
உன்னை அடைந்த பின்னே
என்
பயணம் ஓயும்
அதுவரை ஓய்வில்லை எனக்கு!
உச்சியில் இருந்து
தடைகள் தாண்டி
வளைவு சுழிவுகள் என
கட்டுப்படுத் முடியாமல்
ஒடி வரும்
ஒரு அருவியாய்
நான்
எனக்காய் காத்திருக்கும்
கடலாய் நீ...
என்னை நான்
நினைத்தாலும்
கட்டுப்படுத்த முடியாது
உன்னை அடைந்த பின்னே
என்
பயணம் ஓயும்
அதுவரை ஓய்வில்லை எனக்கு!
கருவறை
மூடப்பட்ட
கதவின்
அறைக்குள்
முழுமையாய்
எல்லாம் கிடைத்தன
என்ன சுகம்
என்ன ஆனந்தம்
உணவும்
உணர்வும்
கிடைத்தன அங்கு
பகையும் இல்லை
பகை எதிர்ப்பும் இல்லை
அன்பும்
அரவணைப்பும்தான்
அங்கு கிடைத்தன
பாசத்தடவல்களும்
பரிமாற்ற
ஆழ்ந்த அன்பும்தான்
அங்கு கண்டேன்
வேசமும் இல்லை- நல்
வேடம் தாங்கிய
விஷக்கிரிமிகளும் அங்கில்லை....
ஐயிரெண்டு திங்கள்
அங்கிருந்து
பெற்ற சுகம்
ஐயாயிரம் திங்கள்
சென்றிடுனும்
திருப்பு வரா எமக்கு...
கதவின்
அறைக்குள்
முழுமையாய்
எல்லாம் கிடைத்தன
என்ன சுகம்
என்ன ஆனந்தம்
உணவும்
உணர்வும்
கிடைத்தன அங்கு
பகையும் இல்லை
பகை எதிர்ப்பும் இல்லை
அன்பும்
அரவணைப்பும்தான்
அங்கு கிடைத்தன
பாசத்தடவல்களும்
பரிமாற்ற
ஆழ்ந்த அன்பும்தான்
அங்கு கண்டேன்
வேசமும் இல்லை- நல்
வேடம் தாங்கிய
விஷக்கிரிமிகளும் அங்கில்லை....
ஐயிரெண்டு திங்கள்
அங்கிருந்து
பெற்ற சுகம்
ஐயாயிரம் திங்கள்
சென்றிடுனும்
திருப்பு வரா எமக்கு...
Saturday, July 18, 2009
அன்பு
உன்னுடல் பார்த்து
வருவதல்ல
அன்பு
உன்னுள்ள அழகை
உணர்ந்து வருவதே
அன்பு
பார்க்கும்போது
மட்டும்
பரிமாறிக்கொள்வதல்ல
அன்பு
எங்கிருந்தாலும்
பார்க்க துடிக்கும்
இயல்பே
அன்பு
தூர இருந்தும்
மனசார
உனக்காய்
வேண்டிக்கொள்வதே
அன்பு....
வருவதல்ல
அன்பு
உன்னுள்ள அழகை
உணர்ந்து வருவதே
அன்பு
பார்க்கும்போது
மட்டும்
பரிமாறிக்கொள்வதல்ல
அன்பு
எங்கிருந்தாலும்
பார்க்க துடிக்கும்
இயல்பே
அன்பு
தூர இருந்தும்
மனசார
உனக்காய்
வேண்டிக்கொள்வதே
அன்பு....
மரணம்
நாம் இருக்கும்
போது
வரத்துணிவற்ற
கோழை
மரணம்....
போன பின்பு
வந்து
கும்மாளமிடும்
வாயாடி மட்டுமே நீ...
நெஞ்சில் துணிவிருந்தால்
நேருக்கு நேரே
வந்து பார்...
போது
வரத்துணிவற்ற
கோழை
மரணம்....
போன பின்பு
வந்து
கும்மாளமிடும்
வாயாடி மட்டுமே நீ...
நெஞ்சில் துணிவிருந்தால்
நேருக்கு நேரே
வந்து பார்...
Thursday, July 16, 2009
அஞ்சோம்
உன்னோடு நானும்
என்னோடு நீயும்
சேரும் நாட்களுக்கு
காத்திருக்க
வேண்டியதில்லை॥
செந்நிற அழகை
அந்த நிலத்தில்
பெய்யப்பட்ட மழை நீர்
பெற்று கலந்து விடுவது
போல உன் உள்ளமும்
என் உள்ளமும்
இரண்டற கலந்து
விட்டென॥
இனி நம்மை
பிரிக்க முடியாது
சில வேளை
விதி பிரித்தால்
அந்த விதியையும்
வெல்ல
உலகத்தை விட்டுப்
பிரியவும் அஞ்சோம்॥
என்னோடு நீயும்
சேரும் நாட்களுக்கு
காத்திருக்க
வேண்டியதில்லை॥
செந்நிற அழகை
அந்த நிலத்தில்
பெய்யப்பட்ட மழை நீர்
பெற்று கலந்து விடுவது
போல உன் உள்ளமும்
என் உள்ளமும்
இரண்டற கலந்து
விட்டென॥
இனி நம்மை
பிரிக்க முடியாது
சில வேளை
விதி பிரித்தால்
அந்த விதியையும்
வெல்ல
உலகத்தை விட்டுப்
பிரியவும் அஞ்சோம்॥
மரணத்தையும் வெல்வோம்
உன் மனதையும்
என் மனதையும்
இறுக கட்டிவிட்டான்
இறைவன் ...
பின்னிப்பிணைந்து விட்டன
என் இதயமும்
உன் இதயமும்॥
இனி அந்த
கடவுளே
நினைத்தாலும்
எமை
பிரிக்க முடியாது॥
மரணம் எமை
தன் தழுவிக்கொண்டாலும்
அந்த மரணத்தையும்
வெல்வோம்....
என் மனதையும்
இறுக கட்டிவிட்டான்
இறைவன் ...
பின்னிப்பிணைந்து விட்டன
என் இதயமும்
உன் இதயமும்॥
இனி அந்த
கடவுளே
நினைத்தாலும்
எமை
பிரிக்க முடியாது॥
மரணம் எமை
தன் தழுவிக்கொண்டாலும்
அந்த மரணத்தையும்
வெல்வோம்....
Wednesday, July 15, 2009
ஓரக்கண்ணால்
உன் கண்
அழகில் என்
கண்கள்
மயங்கிவிட்டதடி...
ஓரக்கண்ணால்
மட்டும் உன்னை
பார்க்கிறேன்
முழுமையாய்
உன்னை பார்த்தால்
உன்னை
தொடர்ந்து பார்க்கும்
சக்தி அற்றதாகிடும்
என்பதால்...
அழகில் என்
கண்கள்
மயங்கிவிட்டதடி...
ஓரக்கண்ணால்
மட்டும் உன்னை
பார்க்கிறேன்
முழுமையாய்
உன்னை பார்த்தால்
உன்னை
தொடர்ந்து பார்க்கும்
சக்தி அற்றதாகிடும்
என்பதால்...
Tuesday, July 14, 2009
நான் பேயனாகி
நான் ஒரு
கிரகத்திலும்
நீ ஒரு
கிரகத்திலும்
இருந்தென்ன
லாபம்!
கற்பனைக்
கனவில் மட்டும்
காட்சி தர
வானத்து நிலவுக்கு
அழைக்கிறாய்
கனவு முடிந்ததும்
தூரத்தே தூக்கியெறியப்படுகிறேன்
வெவ்வேறு இட
வாழ்வு வேண்டாம்
என்னை நீ அழை அல்லது
என்னோடு நீயும்
வந்துவிடு...
கனவில் மட்டும்
நீ வருகிறாய் அது
கலைந்ததும்
நான் பேயனாகி
உன்னை தேடி
அலைகிறேன்..
கிரகத்திலும்
நீ ஒரு
கிரகத்திலும்
இருந்தென்ன
லாபம்!
கற்பனைக்
கனவில் மட்டும்
காட்சி தர
வானத்து நிலவுக்கு
அழைக்கிறாய்
கனவு முடிந்ததும்
தூரத்தே தூக்கியெறியப்படுகிறேன்
வெவ்வேறு இட
வாழ்வு வேண்டாம்
என்னை நீ அழை அல்லது
என்னோடு நீயும்
வந்துவிடு...
கனவில் மட்டும்
நீ வருகிறாய் அது
கலைந்ததும்
நான் பேயனாகி
உன்னை தேடி
அலைகிறேன்..
வண்டாக
பூவோ! அல்லது
பூவினுள் உள்ள
பூந்தேனோ?
எதுவாக நீஇருப்பினும்
உன்னை தினம்
நாடி வரும்
வண்டாக
நான் இருப்பேன்॥
பூவினுள் உள்ள
பூந்தேனோ?
எதுவாக நீஇருப்பினும்
உன்னை தினம்
நாடி வரும்
வண்டாக
நான் இருப்பேன்॥
Monday, July 13, 2009
நட்பும் காதலும்
ஆபத்தில்தன்
உயிர் கொடுத்து
நண்பனை
காத்திடுவது
நட்பு...
அன்புக்குரியவரின்
அழிவு கண்டு
மனம் ஆற்றாது
தானும்அழிந்து
போவது
காதல்...
உயிர் கொடுத்து
நண்பனை
காத்திடுவது
நட்பு...
அன்புக்குரியவரின்
அழிவு கண்டு
மனம் ஆற்றாது
தானும்அழிந்து
போவது
காதல்...
Subscribe to:
Posts (Atom)


