Tuesday, July 14, 2009

நான் பேயனாகி

நான் ஒரு
கிரகத்திலும்
நீ ஒரு
கிரகத்திலும்
இருந்தென்ன
லாபம்!


கற்பனைக்
கனவில் மட்டும்
காட்சி தர
வானத்து நிலவுக்கு
அழைக்கிறாய்
கனவு முடிந்ததும்
தூரத்தே தூக்கியெறியப்படுகிறேன்


வெவ்வேறு இட
வாழ்வு வேண்டாம்
என்னை நீ அழை அல்லது
என்னோடு நீயும்
வந்துவிடு...

கனவில் மட்டும்
நீ வருகிறாய் அது
கலைந்ததும்
நான் பேயனாகி
உன்னை தேடி
அலைகிறேன்..

வண்டாக

பூவோ! அல்லது
பூவினுள் உள்ள
பூந்தேனோ?

எதுவாக நீஇருப்பினும்
உன்னை தினம்
நாடி வரும்
வண்டாக
நான் இருப்பேன்॥