Wednesday, October 28, 2009

கன்னியும் காதலும்


இரவின் மொளனத்தில்
இனிய அமைதியை
களித்த இன்பத்தில்
உறக்க காலத்தினை
முடித்து ...
நிகரில்லா மகிழ்ச்சியில்
துள்ளிக்குதிக்கும்
மனவுள்ளத்தோடு
காலைக்கதிரவனின் கதிர்களை
கண்டு மொனத்தை
கலைத்து இரா மெல்ல செல்ல ...
மழைத்துளிகளை
தரையில் கொட்ட
துடிக்கும் கருமேகம் போல
பொறுத்து பொறுத்து
காத்திருந்து தாங்காமல்
மொட்டு சட்டென வெடித்து
மலராய் மலர
அதுவரை நேற்றின்
இனிய போதையில்
படுத்துறங்கிய சிறுவண்டுகள்
மொட்டு வெடிப்பின்
ஓசைகேட்க
இடியோசை கேட்ட
நாகமென திடிரென்று விழித்து
தேனை அருந்த
ஓடோடி வரும்
தேனீக்கள் போல ....
அன்பையும் அழகோடு கூடிய
அரவணைப்பையும் நாடிச் சென்றிட
துடிக்கிறது கன்னியின் உள்ளம்
அதைத்தான் காதல் என்கிறது
காலம் காலமாய் எழும்
காவியங்களும் ..............


By.K.Eலட்சியன்