Sunday, July 12, 2009

வைரமுத்து இங்குற்ற இந்நாள்

தமிழ்த்தாய் வயிற்றுதித்து
மலர்ந்த
கவிப்பூங்கா
ஒன்று புது
அகவை
காணுகிறது...

வைரமே வைரமே
நீ ஒன்றும் முன்பு
பெரிய மதிப்புடையோன்
அல்ல! எங்கள்
அண்ணல் பெருங்கவி
இங்குதித்த இந்நாளே
உன்பெயர் உலகறிந்தது...

முத்துவே முத்துவே
ஆழ்கடலில் நீ
வந்திட்டதால்
உனக்கு அந்தஸ்து
வந்ததென்று
எண்ணாதே!
எங்கள் தமிழவள்
ஈன்ற ஈடுணையற்ற
வைரமுத்து இந்நாள்
இங்குற்றதால்
உனக்கு வந்தது
புகழ்...

அமுதத்தினும் இனிய
தமிழ்தந்த
கறுப்பு வைரம்
புதுவகவை புகுகிறது
புதுவகவையே!
இனித்தான் உனக்கு
புகழ்...

வாழ்க வாழ்க
பெருங்கவி
பேரரசு வாழ்க
பெருமைபெற்ற
தமிழே எங்கள்
கவிப்பேரரசால்
வாழ்க...

மேகம்

உதவாமல் இருக்கின்ற
ஒன்றை தெரியாமலே
திருடி..
உதவுகின்ற வகையில்
சீரமைத்து எல்லோரும்

எல்லாம் மகிழ
தெரியக்கொடுக்கின்ற,
சொல்லாமல்
நன்மை பயக்கும்
பெருந்தகை....

சேர்த்து விடு

காற்றே உனக்கு
ஏன்
ஓர நீதி...


ஒரு பூவின்
மகரந்தத்தை
எடுத்து சென்று
இன்னொரு பூவின்
மகரந்தத்துடன்
சேர்த்து
சித்து விளையாட்டு
செய்து
ஏதேதோ உதவுகிறாய்...

எனக்கும் அவளுக்கும்
இடைவெளி
தொடர்கிறது
ஏதாவது
சித்து செய்து
சேர்த்து விடு
என்னோடு அவளை

பருவப்பார்வை

பருவ
மழைக்காககாத்திருக்கும்
பயிர்கள்போல்...

எனக்குள் தோன்றிய
உன் மீதான
காதல் செடியானது -உன்
பருவப்பார்வைக்காக காத்திருக்கின்றது...