Sunday, July 19, 2009

நட்பு

நீ ஒரு நிறம்..
நான் ஒரு நிறம்..
உனக்கொரு தாய்..
எனக்கொரு தாய்..
நானும் நீயும்
எங்கெங்கோ
பிறந்தோம்...
ஆனால் நட்பின்
பாதையில்
இணைந்திட்டோம்॥
இனியென்ன நட்பே
எனக்கும் உனக்கும்
உரிய பாதை
ஒரு தன்னலமற்ற பாதையாய்
தொடர்வோம் நம் பயணம்...

கொல்லும் காதல்


என் இதயத்தை
குத்தி கூறுபோடுகிறது
காதல்...
என் காதலே
என்னுயிர் தின்னும்
கொலைஞன் ஆனது
இதயம் சிதறி
துளித்துளியாய்
சொட்டும் ரத்தத்தில்
இருக்கும் ஒவ்வொரு
அணுக்களும் உன்
பெயர் சொல்லுமடி ...

இலட்சியனின் கிறுக்கல்கள்: காதல்

இலட்சியனின் கிறுக்கல்கள்: காதல்

காதல்


ஓய்வில்லை

மலை முகட்டின்
உச்சியில் இருந்து
தடைகள் தாண்டி
வளைவு சுழிவுகள் என
கட்டுப்படுத் முடியாமல்
ஒடி வரும்
ஒரு அருவியாய்
நான்
எனக்காய் காத்திருக்கும்
கடலாய் நீ...

என்னை நான்
நினைத்தாலும்
கட்டுப்படுத்த முடியாது
உன்னை அடைந்த பின்னே
என்
பயணம் ஓயும்
அதுவரை ஓய்வில்லை எனக்கு!



கருவறை

மூடப்பட்ட
கதவின்
அறைக்குள்
முழுமையாய்
எல்லாம் கிடைத்தன
என்ன சுகம்
என்ன ஆனந்தம்

உணவும்
உணர்வும்
கிடைத்தன அங்கு

பகையும் இல்லை
பகை எதிர்ப்பும் இல்லை
அன்பும்
அரவணைப்பும்தான்
அங்கு கிடைத்தன

பாசத்தடவல்களும்
பரிமாற்ற
ஆழ்ந்த அன்பும்தான்
அங்கு கண்டேன்

வேசமும் இல்லை- நல்
வேடம் தாங்கிய
விஷக்கிரிமிகளும் அங்கில்லை....

ஐயிரெண்டு திங்கள்
அங்கிருந்து
பெற்ற சுகம்
ஐயாயிரம் திங்கள்
சென்றிடுனும்
திருப்பு வரா எமக்கு...