மூடப்பட்ட
கதவின்
அறைக்குள்
முழுமையாய்
எல்லாம் கிடைத்தன
என்ன சுகம்
என்ன ஆனந்தம்
உணவும்
உணர்வும்
கிடைத்தன அங்கு
பகையும் இல்லை
பகை எதிர்ப்பும் இல்லை
அன்பும்
அரவணைப்பும்தான்
அங்கு கிடைத்தன
பாசத்தடவல்களும்
பரிமாற்ற
ஆழ்ந்த அன்பும்தான்
அங்கு கண்டேன்
வேசமும் இல்லை- நல்
வேடம் தாங்கிய
விஷக்கிரிமிகளும் அங்கில்லை....
ஐயிரெண்டு திங்கள்
அங்கிருந்து
பெற்ற சுகம்
ஐயாயிரம் திங்கள்
சென்றிடுனும்
திருப்பு வரா எமக்கு...
No comments:
Post a Comment