Saturday, November 29, 2008

கங்கை

நுதல் விழி
நாட்டத்து
இறையோன்
தலை மீது
பிறையுடன்
அமர்ந்துறைந்து
அருளோங்கும்
தேவியே! - உன்
புகழை
பறை சாற்ற
அறை கூவி
அழைப்பேன்
மழையென
கவிமழை
பொழிய
அருள்வாய்
எஞ்ஞான்றும்...
புவி மீது
புகழடைந்து
விண் மீது
உன் அடி
பணியவே!!!

புராணங்கள் எல்லாம்
உன் கதை
சொல்லும்
மேவிய மேதை
யாவரும்
கூவியே உன்தன்
புகழ் தனை
காவியமாக்கி
சாதனை செய்வர்!!!

பகிரத மாமன்னன்
புவியாண்ட
போது
அவனுருகி
சிவனை நினைந்து
ஆழ்
தவமிருந்து
பெற்ற பேறே
விண்ணிருந்து _ நாம்
உமைப்பெற்ற
வழியென
முன்னோர்
ஜதிகம் சொல்லும்
தாயே!!!

புவி வாழும்
உயிர் யாவும்
அவை வாழ
உனை இன்றி
அமையும்
அணுவும் இருக்காது
என் நீர்த்தாயே

எத்தனை உலகம்
அத்தனை எங்கும்
நீ இன்றி
அணுவும் அசையாது


பிறப்பிறப்பெல்லாம்
உன்னாலே...
இருந்தவர்
பின்
இறந்தும் - அவர்
சிறப்பை இன்னும்
இருப்பவர்
பெசுவர்...
அவர்தம் இருப்பு
நிலையாக
நாதமாய்
இருப்பதும்
நீயே!

குடிக்க தண்ணீர்
பின் பசிக்கும்
தின்ன சோறு
அதை
அவிக்க வென்னீர்
.... வேண்டும் அரிசி...ம்
உருவாக்க நெல்லு
போவேன் செய்ய
பயிரு
பாச்ச
வேண்டும்
நீரு
அப்போ
எல்லாமே
நீதானே தாயே!!!




Wednesday, November 26, 2008

ஞாயிறின் ஞாயிறே

கண்மலர்ந்து நீயும்
விண்ணுயுயர உயர
மண்ணிலுளோர்
(இடு)கண் அ(யர)ற
வெடுக்கன வருவாய்
(நடு) நன் நாயகனாய்
தொடுவானில் மிடுக்குடன்
ஞாயிறின் ஞாயிறே...

இரவின் புறப்பாடு

இரவிரவாய்
அலைமோதும் மனதின்
திறானாய்வுக்காக
காலையின் புறப்பாடு...

அளவற்ற அன்பின்
ஆழ்மன வெளிப்பாடாய்
நட்பின் பரிபாசையாய்
மெளன மொழிகளின்
பரிமாற்றங்கள்
பனி்ச்சாரலாக
உணர்வொடு உதிரும்
வார்த்தைகளாக
காலை மாலை
மதிய வணக்கங்கள்

வெட்கத்தில் நிலா

ஆடையில்லா நிலா
விண்மீன்கள் சிமிட்டின
கண்களை..
வெட்கத்தில் நிலா
முகம் சாய்த்தது...
வெண்மேகம் தன்
ஆடைகொண்டு
போர்த்திக்கொண்டது..

கன்னக்குழி

உன் கன்னத்தில்
குழி மட்டும் அல்ல
நானும் விழுந்துவிட்டேன்
எழ முடியவில்லை
எழுந்தால் நானும்
முடிந்து விடுவேன்

மழலை


பச்சிளம் குழந்தையின்
பல்லே இல்லாத
பவளவாய்ச் சிரிப்பு
பகட்டாய் இருக்கும்
பண்ணிசையும்
ஒருபடி குறைவுதான்
அதற்கு...

பார்ப்போர் மனதில்
பால் வார்க்கும்
விண் மீன்களும்
மெல்லென சிரித்து
நல்லொழி காட்டும்...

வெண்ணிலா
தன்னொழி மறந்த
இவ்வொளிதனில்
இனிதே
இரசனை கொள்ளும்...

கூவிடும் குயில்கள் - தன்
குரலை அமுக்கி
ஒரு கணம்
சிரிக்கும் குழந்தையின்
சிங்காரவொலியை
ஒளிந்து கேட்கம்...

பால் பொங்கும்
பசும் பொன்
முகம் கண்டு
பசியால் துடித்திடும்
மானிடர்
தன்னிலை மறந்து
இந்நிலைதனில்
இசைந்து கொள்வர்...

கிள்ளையென சிறு
பிள்ளை
துள்ளி விளையாடும்
கொள்ளை அழகு
கோடி கொடுத்தும்
தேடி வராது
உமக்கு!

Sunday, November 23, 2008

மாறாத மாற்றங்கள்
















மாறாத மாற்றங்களுள்

சலமில்லா இரவும்


தவிப்புக்களுக்கு


முற்றுப்புள்ளி ஏதும்


இடாமல் செல்கிறது...


புதுவொரு எதிர்பார்ப்போடு


எழுகிறேன்...


முழுமை பெறாத


நேற்றைய குறைகளுடன்


தோற்குமோ? இன்றைய


காலையும் என்ற


சிந்தனை நீழ்ச்சியில்...

இறைந்து கேட்கிறேன்


கரைந்து போனது
இரவு...
விரைந்து வந்தது
விடியல்...
மறைந்து அழிகிற
பனித்துளிகள் போல்...
நட்பின் துன்பங்கள்
ஒழிந்து போக...
இறைந்து கேட்கிறேன்
இறைவனை...

தகர்த்திடு

கருவிலும் சொல்லவில்லை
உருவிலும் மாற்றமில்லை
அறிவிலும் குறையில்லை
தலையிலும் எழுதவில்லை
பிறப்பால் மனிதர்தான் ....எங்கு?
(நிறப்)பால் கண்டாய்
மனிதா?

மனிதன் மேம்பட
வகுத்தான் பிரிவை
முன்னோன்....
பின்னோன் பிரித்திழித்து
பிதற்றுகிறான்- நான்
மேலோன்- நீ
கிழோன் என......

வெட்டினால்
கொட்டும் இரத்தம்
மட்டும் சிவப்பு...பின்னேன்?
மனிதரில் உமக்கு
வகுப்பு!

அறிவில் ஆறு
வடிவில் மிக்கழகு
குணத்தில் கனிவு
பண்பில் அன்பு
நடையில் பீடு- அவன்
கொடையில் வள்ளல்- யாவரும்
பாடையில் ஈறாக
பேடை உனக்கேன்
ஜாடை!

பிறர்
துன்பியல் கண்டால்
துடித்திடும் மனது
வம்பியல் தெரியாது
நம்பி வந்தோர்
நலன் காக்கும்
நற்றியில் தெரியும்
சுற்ற இருப்போரை
பெற்றவர் போல்
பேணிக் காத்திடும்
இவ்வியல் கண்டால்
ஏற்றிப்போற்றிடு
இவனே மேலோன்
எழுந்திடும் மனிதம்
இகத்தே எந்நாளும்!

விடியல்

இருள் துடைத்து
ஒளி அருளும்
புவி மேவிய
ரகு வீரா - நட்பின்
துயர் விலக்கி
திறன் துலக்கு
குலம் விளங்க
வளம் வழங்கு
கொட்டும் முரசு
எட்டும் திசையாவும்
இனிதே உன்
புகழ்பாடி!

அன்னை

சுவர் சூழ்ந்த
இருண்ட கருவறையின்
இருளுக்குள் - நீ
தோன்றினாய்
இரவென்ன
பகலென்ன
உனக்கென்ன தெரியும்
அறிவாய் ஒன்று
இருள் மட்டும் தானே...

நீ வாழ
தான் உண்டு
தந்தாள்
தனக்குள் இருக்கும்
உந்தனக்கு
அதை உண்டு
அதற்குள் வடிவானாய்
அழகுடை உருவானாய்
பெரும் இடம்
கேட்டாய்
பொறுத்துக் கொண்டு
இடம் தந்தால்
கழிப்புற்ற நீயும்...
ஓங்கி உதைத்து
அன்னையின் உடலை
வருத்தும்
குறும்புகள்
பல செய்தாய்....
அதையும் குறம்புடன்
தாங்கி தடவிக்
கொடுத்தாள் உன்
அன்னை!

இவ்வாறு
ஈரைந்து திங்கள்
இனி்தே உனைச்
சுமந்து
பார்போற்ற
நீ வாழ
புதுவுலகம்
காட்டிய உன்
அன்னையே!!!!
நீ
கும்பிட வேண்டிய
முதற் தெய்வம்
போக வேண்டிய
பெரும் கோயில்!


கேள்விக் கணைகள்

நகரும் நாட்கள்
மெளனிக்கும் நிஜங்கள்
தொடரும் வேதனைகள்
?க்கு விடைகள் -இராவின்
விடியலில் மொய்க்கின்றன..
நிம்மதி ஒன்று...
சொல்லும்..இனிய காலை வணக்கங்கள்...

என் காதலி











வைகறைப் பொழுதில்
வானவில் வளைவில்
உன் வதன
நெற்றியின்
நெளிவு நிதம்
கண்டு
உளம் கனிந்து
உவகையுற்றேன்!

வில் நிறம்
தனில்
கண்ணின் கரு
வட்ட வடிவு
கண்டு
என்னை ஈர்க்கும்
இயைவை
எண்ணி ஏங்கி
நின்றேன்!

சாளரவோரம் நின்று
விண்நோக்கி
வெண் மேக
மெல்லிய
நல்லாடையணிந்த
தண்மதியின்
மெல்லிடை கண்டு
உன்னிடையின்
செந்நிறம்தனை
நினைந்து
உறைந்து
உருகினேன்
என் தோழி....