Thursday, August 13, 2009

காதல் சுகமானதா?

காதல் சுகமானதா?

தூக்கத்தில் நடக்கிறேன்
தனிமையில் ஏதேதோ பேசுகிறேன்,
கண்கள் மூடினாலும்
தூக்கம்வர மறுக்கிறது,
ஒவ்வொரு நொடியும்
ஒவ்வொருயுகமாக தோன்றுகிறது,
அன்பாய் பேசும்
அம்மாவிடம் எரிந்து விழுகிறேன்,
அம்மா அப்பா
பெரிதாய் தெரியவில்லை,
புத்தகம் திறந்தால்
புத்தகத்துடன் கதைக்கிறேன்
பக்கத்தில் நண்பன்
பைத்தியமாடா? என்று கேட்கிறான்,
படிப்பில் நாட்டமில்லை,
எல்லா முகத்திலும் அவளே தெரிவதால்
காணும் ஒவ்வொரு பெண்ணையும்
பார்த்து பல்லிளிக்கிறேன்,
இவ்வளவும் வழமைக்கு மாறாக
நடக்கின்றன
அப்படியென்றால் காதல் சுகமானதா?
இல்லை இல்லை காதல் பெரும் அவஸ்தை...


அன்புடன்
க.Eலட்சியன்