Saturday, July 18, 2009

அன்பு

உன்னுடல் பார்த்து
வருவதல்ல
அன்பு

உன்னுள்ள அழகை
உணர்ந்து வருவதே
அன்பு

பார்க்கும்போது
மட்டும்
பரிமாறிக்கொள்வதல்ல
அன்பு

எங்கிருந்தாலும்
பார்க்க துடிக்கும்
இயல்பே
அன்பு

தூர இருந்தும்
மனசார
உனக்காய்
வேண்டிக்கொள்வதே
அன்பு....





மரணம்

நாம் இருக்கும்
போது
வரத்துணிவற்ற
கோழை
மரணம்....

போன பின்பு
வந்து
கும்மாளமிடும்
வாயாடி மட்டுமே நீ...

நெஞ்சில் துணிவிருந்தால்
நேருக்கு நேரே
வந்து பார்...