சுவர் சூழ்ந்த
இருண்ட கருவறையின்
இருளுக்குள் - நீ
தோன்றினாய்
இரவென்ன
பகலென்ன
உனக்கென்ன தெரியும்
அறிவாய் ஒன்று
இருள் மட்டும் தானே...
நீ வாழ
தான் உண்டு
தந்தாள்
தனக்குள் இருக்கும்
உந்தனக்கு
அதை உண்டு
அதற்குள் வடிவானாய்
அழகுடை உருவானாய்
பெரும் இடம்
கேட்டாய்
பொறுத்துக் கொண்டு
இடம் தந்தால்
கழிப்புற்ற நீயும்...
ஓங்கி உதைத்து
அன்னையின் உடலை
வருத்தும்
குறும்புகள்
பல செய்தாய்....
அதையும் குறம்புடன்
தாங்கி தடவிக்
கொடுத்தாள் உன்
அன்னை!
இவ்வாறு
ஈரைந்து திங்கள்
இனி்தே உனைச்
சுமந்து
பார்போற்ற
நீ வாழ
புதுவுலகம்
காட்டிய உன்
அன்னையே!!!!
நீ
கும்பிட வேண்டிய
முதற் தெய்வம்
போக வேண்டிய
பெரும் கோயில்!
No comments:
Post a Comment