பிரிவே நீ
ஒரு சிறைச்சாலை
உள்ளத்தால்
ஒன்றுபட்ட
இதயங்களை
இணைய விடாமல்
நாட்கணக்கில்
தனித்தனியே
சிறையில்
பூட்டி வைத்து
ஈற்றில்
ஈவிரக்கமின்றி
கொன்று தீர்க்க
வழிசெய்யும்
நரகச்சாலை...
எனினும் உன்னை
எனக்கு பிரியமாய்
பிடித்திருக்கிறது
"பிரிவே"
பரஸ்பர
அன்பின்
ஆழத்தை
அறிவித்து
அதை இன்னும்
கூர்மையடையச் செய்யும்
சக்தி உனக்கு
மட்டும்தான் உண்டு
அதனால் உன்னை
எனக்கும் பிடிக்கிறது.....
No comments:
Post a Comment